ஐனவரி 11
“துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும். சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (சங்.74:21) பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டின் விசுவாசிகள் பலர் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கென பல வேதனைகளையும், பாடுகளையும் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிரியமானது இந்த 74ம் சங்கீதம் எனலாம். அவர்கள், ‘தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்?” (வச.10) எனக்; கேட்பதில் தவறு இல்லையே! ‘பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறது” (வச.20) என்று அவர்கள் நன்கு அறிவர். பயங்கரத்திலும், இருளிலும் சிக்கித் தவிக்கும் உள்ளத்திலிருந்து எழும்பும் ஒப்பாரிப்…