January

ஐனவரி 1

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசா.41:10) இப்படிப்பட்ட அருமையான ஆணித்தரமான உறுதி மொழியை நாம் வேதாகமத்தில் வேறு எங்கும் காணமுடியாது. பல நூற்றாண்டுகளாக தேவனுடைய பரிசுத்தவான்கள் பலர் கவலையிலும், சந்தேகத்திலும், அவரது அடைக்கலத்தை நாடிச் சென்று, சர்வ வல்லவரின் சகாயத்தைப் பெற்றுள்ளனர். இவ்வசனத்தினால் தேவன் நமக்கு வாக்களித்துள்ளவற்றைக் காண்போம். நம்மோடுள்ள தேவன். நான்…