May

மே 22

மே 22 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்.5:9). சமாதானம்பண்ணுகிறவர்கள் தங்களுக்குத் தீங்கு செய்கிறவர்களைப்பற்றி கவலைப்படார். தீமைகளைக் கடந்து செல்வர். அதிகமாக அடிக்கப்பட்டாலும் அமைதியுடனிருப்பர். ஏனெனில், தாம் சமாதானம்பண்ண விரும்புவதை அறிகிறவர் ஒருவர் உண்டென அறிந்து அயலாரோடு சமாதானத்துடன் இருப்பர். சமாதானம் பண்ணுகிறவர்கள், ஆண்டவரின் ஆலோசனையின்படி செய்கிறவர்கள். ஏனெனில் அவர், உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. அவன் உனக்குச் செவிகொடுத்தால்,…

May

மே 21

மே 21 …. பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் (லூக்.5:10). நமது இரட்சகரைச் சந்திக்கும் வரையில் சீமோன் பேதுரு சுயநிறைவுள்ளவனாயிருந்தான். யோர்தான் நதிக்கரையில் யோவான் ஸ்நானன், இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி எனக் கூறிய வார்த்தைகளைக் கேட்டான். இரா முழுவதும் பாடுபட்டு ஒன்றும் கிட்டாமல் சோர்ந்து போன அவன் ஆண்டவரின் கட்டளைப்படி மீண்டும் வலை வீசினான். திரளான மீன்கள் கிட்டியதால் திடுக்கிட்டான். இயேசுவின் பாதத்தில் விழுந்து, ஆண்டவரே நான் பாவியான மனுஷன்.…

May

மே 20

மே 20 …. தேவனே விளையச் செய்தார் (1.கொரி.3:6) நாம் செய்யும் காரியங்கள் யாவற்றிற்கும் பிறரிடம் நன்மதிப்பை எதிர்பார்ப்பது நம் உள்ளத்தின் இயல்பு. நம் அயலாரின் பாராட்டை நாம் அதிகமாக விரும்புகிறோம். தேவனுடைய ஊழியத்தின் பாதையில் சுயநலம் குறுக்கிட்டு, அதை அழித்து நாசமாக்கிவிடுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் நமது இரட்சகருக்குச் சாட்சியாக வாழவேண்டும். ஒவ்வொரு விசவாசிக்கும் பரிசுத்த ஆவியின் வரங்களில் ஏதாகிலும் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு. எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஆவியினுடைய அநுக்கிரகம்…

May

மே 19

மே 19 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1). நாம் செய்த தவறுகள், முறைகேடுகள், உள்ளத்தின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் பாவம் போன்றவைதான் உண்மையான மனந்திரும்புதலுக்கும், பாவ மன்னிப்பிற்குனும் தடையாக உள்ளது. சால்லஸ் பின்னியைப் பெருமை தடைசெய்தது. தன் சட்டப் புத்தகங்களுக்கு இடையே வேதாகமத்தை வைப்பதற்கு வெட்கப்பட்டு அதை ஒளித்து வைத்தார். அதன்பின்பு அவர் ஜெபித்தபோது அவர் இருதயம் கடினப்பட்டு, ஜெபிப்பதற்கு உதடுகளில் சப்தம் எழவில்லை. வில்லியம் பூத்துக்கு தடையாக…

May

மே 18

மே 18 …. இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது (நியா.14:8) சிம்சோனால் இதைப்பற்றி விளக்குவது சற்று கடினம். யாக்கோபும் இதையே, என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் எனக் கூறுகிறார். கடினமான சோதனைகளில் சந்தோஷமடைவதா? நமக்கு ஆலோசனையாகவே ஆவியானவரால் எவப்பட்டு இதை எழுதியுள்ளார். பலவிதமான சோதனைகளில் அகப்பட்டு வெளியேறின பின்புதான் ஒவ்வொரு சோதனையும் நமது நன்மைக்கென கொடுக்கப்பட்டவை என்று உணருகிறோம். சோதனைகள் வரும்போது நம் பலவீனங்களை அறியமுடிகிறது.…

May

மே 17

மே 17 சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் (ஏசா.33:23). அவரது கிருபை போதுமானது. பலவீனத்தில் அவர் பலம் பூரணமாய் விளங்கும். பலவீனத்தில் பெருமை பாராட்டலாம். ஏனெனில் பலவீனப்டுத்தும்போது அவர் பலம் அளிக்கிறார். கிறிஸ்துவின் வல்லமை என்னில் இருக்கிறது. இது ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்வின் படிகள். மாம்சத்தில் கொடுக்கப்பட்ட முள்ளை ஜெயித்த மனிதன் துன்பத்தினை வென்று பாடும் வெற்றிப் பாடல் இது. தேவனுடைய சப்பாணிகளும், குஷ்டரோகிகளும் பிறருக்கென அன்பையும், மகிழ்ச்சியையும் தரமுடியும். அவரது குருடர்கள் மறுமையில் மறைந்த கிடக்கும் மகிமையினை வெளிப்படுத்திக் காட்டமுடியும்.…

May

மே 16

மே 16 நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன் (சங்.119:46). ஸ்டாக்கொல்ம் என்ற பட்டணத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் காலையில் எனக்கு இந்த வாக்குத்தத்தம் முதன் முதலாக தெளிவாகக் கொடுக்கப்பட்டது. மத்திய ஐரோப்பாவிற்கும், மக்கதொனியாவிற்கும் சுவிசேஷத்தை அறிவிக்க நாங்கள் இருவர் பயணப்பட்டோம். அவ்வேளையில் எத்தியோப்பியாவிற்கும் வரவேண்டுமென கேட்டு அடிஸ் அபாவிலிருந்து தந்தி கொடுத்திருந்தனர். அங்கே தேவனுடைய ஊழியத்திற்கு உதவி தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு வழி முழுவதுமாக அடைபட்டதாகத் தோன்றிற்று. ஏனெனில் விமானத்தில்…

May

மே 15

மே 15 …… கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்;டும்படிக்கு அவர்கள் முன் சென்றது (எண்.10:33). தன் பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வைக் குறித்து தேவன் அக்கறை கொண்டுள்ளார். அமைதியுடனும், கரிசனையோடும், மகிழ்ச்சியோடும் அவர் நமக்கெனத் தி;ட்டம் தீட்டுகிறார். நமக்காக இளைப்பாறும் இடங்களைத் தேடிச் செல்பவர் அவர். அக்கினி ஸ்தம்பமும், மேகஸ்தம்பமும் எழும்பும்போது தாங்கள் எங்கு செல்கின்றோம் என்பதை இஸ்ரவேலர் அறியாதிருந்தனர். இதற்கு முன்பாக அந்த வழியாக ஒருபோதும் அவர்கள் சென்றதில்லை. அவர்கள் தங்கள்…

May

மே 14

மே 14 ….. எனக்காகப் பரிதாபப்பட்டு…. அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? (1.சாமு.22:8). சுயத்தை மையமாகக்கொண்ட மனிதன் சாந்தமாயும், உணர்ச்சிமிக்கவனாயும், சுயநலவாதியாகவும் இருப்பான். சுய இரக்கமுள்ளவன் தன்னைப்பற்றியே பரிதாபப்பட்டுக் கொள்வான். வலிமையையும் இழந்துவிடுவான். கர்வம் வரும்போது மற்றவர்களை மதிக்காமல் தன்னைப்பற்றியே அதிகமாக சிந்திக்கிறான். ஆகவே கர்வமுள்ளவன் இகழ்ச்சியடைவான். கசப்பான ஆவி அவன் கறைவுகளை அறியமுடியாதபடி செய்துவிடுகிறது. தன்னையே பெரிதுபடுத்தும் அவன் சோம்பேறியாகி விடுகிறான். தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் தன் மதிப்பை இழந்துவிடுகிறான். என்ன பரிதாபம்! இந்த…

May

மே 13

மே 13 இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல. பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் (2.நாளா.20:17) நாம் எப்பொழுது புறப்பட்டுச் செல்வது? தரித்து நின்று தேவனுடைய இரட்சிப்பைக் காணுவது எப்போ? தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு, யுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லாத வேளையில் அவருக்கென்று எங்கு யுத்தம் செய்வது? இக் கேள்விக்குப் பதில் கிடைப்பது கடினம். நமது இரட்சிப்பின் சேனைத் தலைவர் ஆவியானவரின் உதவியால் தமது வார்த்தைகளினால் தெளிவாக்கிக் காட்டுவார். யோசபாத்தின் தகப்பன் ஆசாவைப் போன்று, தேவனுக்கென யுத்தம்…