வாக்குறுதியைப் பற்றிக்கொள்வோம்
2024 ஜனவரி 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 7,17 முதல் 29 வரை) “இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்” (வசனம் 25). கர்த்தர் தனக்குச் சொன்னதை மிகைப்படுத்துதலோ அல்லது குறைவுபடுத்துதலோ இல்லாமல் நாத்தான் தாவீதிடம் அறிவித்தான். இது நாத்தானின் உண்மைத்தன்மையையும் வெளிப்படத் தன்மையையும் காண்பிக்கிறது. தாவீதுக்குத் தேவையானவற்றைச் சொல்வதற்காகக் கர்த்தர் தன்னையே தெரிந்துகொண்டார் என்ற எவ்விதப் பெருமையும் சுயகௌரவமும்…