ஞானத்தைக் காட்டிலும் பெரியது
2024 பிப்ரவரி 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,5 முதல் 14 வரை) “அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்” (வசனம் 14). தாவீதைக் கொல்வதற்கான அகித்தோப்பேலின் ஆலோசனை சிறந்ததுதான் என்பதை அப்சலோம் அறிந்திருந்தான். ஆயினும் தன்னைச் சேவிக்கும்படி வந்திருக்கிற ஊசாயின் ஆலோசனையையும் கேட்போம் என்னும் அப்சலோமின் முடிவு அகித்தோப்பேலின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றிப்போட்டது. ஊசாய் அப்சலோமின் பெருமைக்கு தீனிபோடும் விதமாக, படையை அகித்தோப்பேல் அல்ல,…