அமர்ந்திருந்து ஊழியம்
2024 பிப்ரவரி 19 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,27 முதல் 29 வரை) “அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்” (வசனம் 29). ராஜா ஆசாரியனாகிய சாதோக்கின்மேல், அவன் ஞானதிருஷ்டிக்காரன் என்ற முறையில் கூடுதலாக நம்பிக்கை வைத்திருந்தான். ஒருவேளை எருசலேமுக்குத் திரும்பிச் செல்கிற அவனால், ஆசாரியப் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும், அங்கே தாவீதுக்காக செய்ய வேண்டிய வேலைகள் இருந்தன. அது அப்சலோமின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அச்செய்தியை தாவீதுக்கு மறைமுகமாக…