April

துரோகத்தின் முடிவு

2024 ஏப்ரல் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,22 முதல் 25 வரை) “என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (வசனம் 24). அதோனியா தாவீதின் இறுதிக்கால விதவை மனைவியைக் கேட்டது, இஸ்ரவேலின் சிம்மாசனத்தைச் சொந்தம் கொண்டாடும்படியான முயற்சி என்பதை சாலொமோன் நன்றாகப் புரிந்துகொண்டான். தான் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டவன் என்னும் உறுதி சாலொமோனுக்கு இருந்ததால் அதோனியாவின் செயல் கர்த்தருக்கு விரோதமானது எனக் கண்டு,…

April

துரோகத்தின் எழுச்சி

2024 ஏப்ரல் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,13 முதல் 21 வரை) “அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்” (வசனம் 18). சாலொமோனின் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது என்று சொல்லப்பட்ட பிறகும் (வசனம் 12), அதன்மேல் அதோனியாவுக்கு ஒரு கண் இருந்தது. கிறிஸ்துவுக்குள்ளாக நம்முடைய ஸ்தானத்தை இழந்துபோகச் செய்யும்படி சாத்தான் எப்போதுமே போராடிக்கொண்டு இருக்கிறான் என்பதை  மனதில் கொண்டு நாமும் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தன்னுடைய சூழ்ச்சி…

April

ஒரு சகாப்தத்தின் முடிவு

2024 ஏப்ரல் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,10 முதல் 12 வரை) “பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” (வசனம் 10). பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய தேவ மனிதனுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவடைந்தது. தேவனை விசுவாசித்த தன் முன்னோர்களைப் போலவே இவனும் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தான். அவனுடைய விசுவாச வாழ்க்கைக்கான பிரதிபலன்களையும் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ளும்படி இப்பொழுது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான். “அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தான்” (1…

April

பிரதிபலன்கள்

2024 ஏப்ரல் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,5 முதல் 9 வரை) “பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; … உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் (தாவீது) ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்” (வசனம் 7). தாவீதுக்கு வயது மூப்பால் உடல் பெலவீனமாகக் காணப்பட்டாலும், அவன் நல்ல நினைவாற்றலுடன் இருந்தான். அவனது கடந்த காலக் காரியங்கள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணிபோல் நிறைந்திருந்தன. தனக்கு நன்மை செய்தவர்களையும் தீமை செய்தவர்களையும், உண்மையாய் உதவியவர்களையும், வாயினால் மட்டுமே அறிக்கையிட்டவர்களையும்…

April

நம்பிக்கையூட்டுதல்

2024 ஏப்ரல் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,1 முதல் 4 வரை) “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு” (வசனம் 2). நம்முடைய நண்பரும், உறவினரும் மரணத்தைச் சந்திக்கும் முன்னர், அவர்களது கடைசி வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய நாம் யாவருமே ஆவலாயிருப்போம். யாக்கோபு தன் அந்திய காலத்தில் தன் பிள்ளைகள் அனைவரையும் அழைத்து தன் இறுதி உரைகளை வழங்கினான். மோசேயும் தான் மரிக்கும்முன் இஸ்ரவேல் மக்களிடம்…

April

இருமனதின் தீமைகள்

2024 ஏப்ரல் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,38 முதல் 53 வரை) “இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (வசனம் 51). தாவீது ராஜாவின் ஒப்புதலுடன், அவனுடைய பிரதான அதிகாரிகள் மற்றும் மெய்க்காவலர்களின் தலைமையில், மக்களின் ஆதரவுடன் விமர்சையான வகையில் அடுத்த மன்னராக சாலொமோன் முடிசூட்டப்பட்டான். “மன்னர் வாழ்க”, “கர்த்தர் மன்னரை ஆசீர்வதிப்பாராக” என்னும் கோசங்கள் விண்ணையும் மண்ணையும் பிளந்தன. இந்தச் சத்தம் போலி ஆதரவாளர்களுடன் தனக்குத்…

April

முடிவுபரியந்தமும் நிலைத்திருத்தல்

2024 ஏப்ரல் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,26 முதல் 37 வரை) “பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்” (வசனம் 32). தாவீது பத்சேபாளை மீண்டும் தன் அறைக்கு அழைத்து, அவன் அவளுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்கின்படி இன்றைய தினம் நான் சாலொமோனை ராஜாவாக்குவேன் என்று சொல்லி உறுதியளித்தான். சற்றுக் காலதாமதம் ஆனாலும் அதோனியாவால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று கருதி, துரிதமாகச் செயல்பட்டான். நாமும்…

April

உண்மைக்கு முகங்கொடுத்தல்

2024 ஏப்ரல் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,15 முதல் 27 வரை) “இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை” (வசனம் 18). பத்சேபாள் தாவீதிடம் பேசும்படி அரண்மனைக்குச் சென்றாள். தாவீது வயதுமுதிர்ந்த நிலையில் இருந்தான். இந்தத் தருணத்தில் உடல் ரீதியாக அவனுக்குச் சேவை செய்ய ஓர் அபிஷாக் இருந்ததுபோல, ஒரு தலைவனாக எதிர்காலக் காரியங்களைத் திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவும் ஓர் உண்மையுள்ள வழிகாட்டி அவசியம். பத்சேபாள் அதைத் தாவீதுக்கு…

April

உரியோருக்குத் தோள்கொடுத்தல்

2024 ஏப்ரல் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,12 முதல் 14 வரை) “என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா” (வசனம் 13). “இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்” (வசனம் 12) என்று நாத்தான் பத்சேபாளிடம் பேசினான். அதோனியா ராஜாவானால் என்ன நடக்கும் என்பதை நாத்தான்…

April

உரிய கனத்தைச் செலுத்துதல்

2024 ஏப்ரல் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,11) “நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா” (வசனம் 11). நாத்தான் ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி. ஆயினும் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவுக்கு செலுத்த வேண்டிய கனத்தைச் செலுத்தத் தவறவில்லை. தாவீதும் நாத்தானும் நண்பர்களாக இருந்தாலும், “நம்முடைய ஆண்டவனாகிய தாவீது” என்று அழைப்பதன் வாயிலாக ராஜ பதவிக்கு உரிய மரியாதையைச் செலுத்தினான். தன்னை எவ்வாறு கர்த்தர் அழைத்தாரோ அதுபோன்றே தாவீதையும்…