பாராட்டுதல் பெற்ற ஜெபம்
2024 மே 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,10 முதல் 15 வரை) சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது (வசனம் 10). சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது. ஞானம், பகுத்தறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் பெரும் தேவையை சாலொமோன் அறிந்திருந்தார். மேலும் இவன் தனக்காகச் செல்வத்தையோ, புகழையோ, அதிகாரத்தையோ கேட்காததைக் கண்டும் கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார். சாலொமோன் ஜெபத்தில் பொருட்களைக் கேட்கவில்லை, மாறாக தன்னுடைய குணத்தை மெருகேற்றும்படியான காரியத்தைக் கேட்டான். நம்மிடம்…