May

பாராட்டுதல் பெற்ற ஜெபம்

 2024 மே 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,10 முதல் 15 வரை) சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது (வசனம் 10). சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது. ஞானம், பகுத்தறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் பெரும் தேவையை சாலொமோன் அறிந்திருந்தார். மேலும் இவன் தனக்காகச் செல்வத்தையோ, புகழையோ, அதிகாரத்தையோ கேட்காததைக் கண்டும் கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார். சாலொமோன் ஜெபத்தில் பொருட்களைக் கேட்கவில்லை, மாறாக தன்னுடைய குணத்தை மெருகேற்றும்படியான காரியத்தைக் கேட்டான். நம்மிடம்…

May

நடைமுறை ஞானம்

2024 மே 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,5 முதல் 9 வரை) “கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்” (வசனம் 5). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தர் சொப்பனத்தில் தரிசனமாகி பேசுவது வழக்கமான ஒன்று. ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு, கிதியோன் போன்றோரிடம் இவ்வாறு பேசியிருக்கிறார். இதைக் குறித்து, “கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய…

May

ஒப்புவித்தலின் வாழ்க்கை

2024 மே 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,4) “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (வசனம் 4). சாலொமோனின் செயல்களில் இன்றியமையாத காரியங்களில் ஒன்று, அவன் ஆட்சிக்கு வந்த புதிதில் கிபியோனுக்குச் சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தியதாகும். எருசலேமிலிருந்து ஏறத்தாழ இருபது மைல் தொலைவில் உள்ள கிபியோனுக்கு தன்னுடைய பரிவாரங்களோடு சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தினான். இருபது மைல் பயணத்தின் பிரயாசம், செலுத்தப்பட்ட ஆயிரம் பலிகள் ஆகியவை சாலொமோனின் இருதய வாஞ்சையையும் கர்த்தருக்கு அதிகமாகக்…

May

சமநிலை வாழ்க்கை

2024 மே 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,1 முதல் 3 வரை) “சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி …” (வசனம் 1). இந்த அதிகாரம் சாலொமோனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடன் ஒப்பந்தம் செய்து, பார்வோனின் மகளை மணந்தான். அண்டை நாட்டு அரச குடும்பத்துடன் சம்பந்தங்கலப்பது அல்லது திருமணம் செய்துகொள்வது பண்டைய உலகில் ஒரு பொதுவான அரசியல் உத்தியாக இருந்தது. ராஜ குடும்பத்தினர்…

May

அலட்சியம் வேண்டாம்

2024 மே 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,36 முதல் 46 வரை) “நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன?” (வசனம் 43). சீமேயி சவுல் அரசனின் உறவினன். இவனுக்குப் பின் தாவீது அரசாண்டதை விரும்பாதவன். தாவீது அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பின்னாகவே வந்து அவனைத் தூசித்தவன் இவன். இவன் நிம்மதியாக மரணமடையக் கூடாது என்று தாவீது சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியால், சாலொமோன் அவனை அழைத்து எருசலேமைவிட்டு எங்கும் போகக்கூடாதென்று வீட்டுக்…

May

புகலிடம் சேர ஆசிப்போம்

2024 மே 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,28 முதல் 35 வரை) “யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்” (வசனம் 28). அதோனியாவுக்கும் அபியத்தாருக்கும் சாலொமோன் தண்டனை வழங்கிய செய்தி யோவாபை எட்டியது. இது அவனது இருதயத்தில் திகிலை உண்டாக்கியது. சாலொமோனின் அடுத்த குறி நான் தான் என்பதை அவன் புரிந்துகொண்டான். தன்னுடைய பழைய குற்றச் செயல்களுக்காக தாவீதிடம் தண்டனை பெறாமல் தப்பித்தாலும், அதோனியாவுக்கு ஆதரவளித்தது தன்மீது விழுந்த குற்றம் என்று…

May

துரோகத்துக்கு உடந்தை

2024 மே 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,26 முதல் 27 வரை) “சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (வசனம் 27). அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால் அவன் தண்டனை அடைந்தான். கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தில் பணிபுரிகிற ஆசாரியன் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவுக்கு விரோதமான சூழ்ச்சியில் பங்குபெற்ற செயலானது அவன் கர்த்தருக்கு மட்டுமின்றி, அந்தப் பதவிக்கும் உண்மையற்றவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. முன்னொரு காலத்தில் அப்சலோம் தந்தைக்கு விரோதமாக எழும்பியபோது இந்த அபியத்தார்…