January

உலகத்தால் பகைக்கப்படுதல்

2024 ஜனவரி 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 10,1 முதல் 5 வரை “தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்” (வசனம் 2). தாவீதின் இரக்கம் மேவிபோசேத்தோடு நிற்கவில்லை, அதை எல்லை கடந்து ஒரு புறமத அரசன் வரைக்கும் சென்றது. அம்மோனின் அரசன் நாகாஸ் எனக்குத் தயவு செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு…

January

கிருபையின் ஆசீர்வாதம்

2024 ஜனவரி 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 9,9 முதல் 13 வரை) “மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது” (வசனம் 13). தாவீதின் அழைப்பு மேவிபோசேத்தின் சூழ்நிலையை மாற்றியது. அவன் இனிமேலும் லோதேபார் என்னும் வறட்சியான பூமியில் வசிக்க வேண்டியதில்லை. அவன் ராஜவிருந்தில் நாள்தோறும் பங்குபெறும் பாக்கியம் பெற்றான். சீபாவும் அவனுடைய மகன்களும் மேவிபோசேத்தின் வேலைக்காரரானார்கள். தாவீது தனக்கு உரிய எல்லாவற்றின்மேலும் மேவிபோசேத்துக்கும் சுதந்தரம் கொடுத்தான்.…

January

கிருபையின் இரட்சிப்பு

2024 ஜனவரி 24 (வேத பகுதி: 2 சாமுவேல் 9,5 முதல் 8 வரை) “சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்” (வசனம் 6). தாவீதின் தயை பாராட்டுதலுக்கான தேடலில் விடையாகக் கிடைக்கப்பெற்றவன் மேவிபோசேத். இவன் யோனத்தானின் மகன், பிறருடைய ஒத்தாசையின்றி வாழ இயலாத ஊனமுற்றவன். தாவீதுக்குப் பயந்து லோதேபாரில் மாகீரின் வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தவன். இவன் இழந்துபோன ஒரு…

January

தயவுபாராட்டுதல்

2024 ஜனவரி 23 (வேத பகுதி: 2 சாமுவேல் 9,1 முதல் 4 வரை) “யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்” (வசனம் 1). முந்தின அதிகாரம் (அதிகாரம் 8) தாவீது அரசனின் வெற்றிகளையும் அவனுடைய புகழ்ச்சிகளையும் அவனுடைய மகிமையையும் விளக்குகிறது. இந்த அதிகாரமோ தாவீது அரசன் மனிதர்மேல் கொண்டிருக்கிற தயவை நம் கண்முன் கொண்டுவருகிறது. மேலும் கர்த்தருக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து…

January

வெற்றிமேல் வெற்றி

2024 ஜனவரி 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 8,1 முதல் 18 வரை) “தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (வசனம் 6). தாவீது கர்த்தருடைய வாக்குறுதியால் பலப்படுத்தப்பட்டான். அவர் அவனுக்கு வெற்றிமேல் வெற்றியைக் கட்டளையிட்டார். தாவீது முதலாவது பெலிஸ்தியர்களைத் தோற்கடித்து தனக்குக் கீழாகக் கொண்டுவந்தான். இவர்கள் பலநாள் எதிரிகள், தொடர்ந்து தொந்தரவு செய்துவந்தவர்கள். இஸ்ரவேலர் பலமுறை இவர்களிடம் வீழ்ந்துபோயினர். இப்பொழுது தாவீது அவர்கள் மேல் முழு வெற்றியைப் பெற்றான். நாம் கர்த்தருடைய வார்த்தையாலும்,…

January

வாக்குறுதியைப் பற்றிக்கொள்வோம்

2024 ஜனவரி 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 7,17 முதல் 29 வரை) “இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்” (வசனம் 25). கர்த்தர் தனக்குச் சொன்னதை மிகைப்படுத்துதலோ அல்லது குறைவுபடுத்துதலோ இல்லாமல் நாத்தான் தாவீதிடம் அறிவித்தான். இது நாத்தானின் உண்மைத்தன்மையையும் வெளிப்படத் தன்மையையும் காண்பிக்கிறது. தாவீதுக்குத் தேவையானவற்றைச் சொல்வதற்காகக் கர்த்தர் தன்னையே தெரிந்துகொண்டார் என்ற எவ்விதப் பெருமையும் சுயகௌரவமும்…

January

தாவீதுடன் உடன்படிக்கை

2024 ஜனவரி 20 வேதபகுதி (2 சாமுவேல் 7,8 முதல் 16 வரை) “அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” (வசனம் 13). நீ எனக்கு ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று விருப்பப்படுகிறாய். இது நல்ல காரியம்தான். ஆயினும் நான் ஒருபோதும் அவ்வாறு கேட்கவில்லையே? உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வந்த நாள் முதல் நான் கூடாரங்களில் வாசம்செய்வதையே தெரிந்துகொண்டேன். எகிப்திய கடவுள்களைப் போல நான் மாடமாளிகைகளிலும்…

January

பிறருக்காகவும் வாழ்வோம்

2024 ஜனவரி 19 வேத பகுதி (2 சாமுவேல் 7,4 முதல் 7 வரை) “அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி…” (வசனம் 4). “கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்” (சங்கீதம் 119 ,55) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அந்த இரவில் நாத்தானுக்கு கூடுதல் வெளிச்சம் கிடைத்தது. கர்த்தர் அவனோடு பேசினார். தான் இதுவரை பேசினதற்கு மாற்றாகக் கர்த்தர் பேசுவதைக் கேட்கிற அளவுக்குத் திறந்த செவியும் கீழ்ப்படிதலுள்ள இருதயமும் அவனுக்கு…

January

கர்த்தர் வசிக்கிற இருதயம்

2024 ஜனவரி 18 வேத பகுதி (2 சாமுவேல் 7,1 முதல் 3 வரை) “ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்” (வசனம் 2). “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (16,7) என்ற நீதிமொழிக்கு ஏற்ப, கர்த்தர் தாவீது ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினார். தாவீது கேதுரு…

January

மகிழ்ச்சிக்கு இடையூறு

2024 ஜனவரி 17 வேத பகுதி (2 சாமுவேல்  6,16 முதல் 23 வரை) “சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போடுகிறதுபோல இன்று தம்முடைய ஊழியக்காரருடைய கண்களுக்கு முன்பாக தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் இராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் (வசனம் 20). தேவனுடைய பெட்டி மகிழ்ச்சியுடன் எருசலேமில் நிலைநிறுத்தப்பட்ட நாளில் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்குபெற்று மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றபோது எருசலேமில் வசித்த…