மீண்டும் பத்துக்கட்டளை
(வேதபகுதி: உபாகமம் 10:1-11) “நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்” (வச. 2). நாம் தேவனுடைய மக்களாக அவருடைய ஆசீர்வாதத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் முன்னேறிச் செல்வதற்கும் மீண்டும் சத்தியத்துக்குத் திரும்புவது அவசியமாயிருக்கிறது. மோசே நீதியின் கோபத்தினால் முந்தின கற்பலகைகளை உடைத்துப்போட்டான். இது இஸ்ரயேல் மக்கள் பிரமாணத்தை மீறிவிட்டார்கள் என்பதற்கு ஓர் அடையாளச் செயலாகும். ஆகவே தேவன் அவர்கள் பிரமாணம் இல்லாத மக்களாக இருக்க விரும்பாமல் மீண்டும் அவர்கள் கைக்கொள்ளும்படியாக பத்துக்கற்பனைகளை…