வனவிலங்குகள் நிறைந்த மலைக்காட்டில் மரத்தின் அடியில் ஒரு மலைஆடு சுகமாகப் படுத்திருந்தது. அதற்கு, வயிறு நிறைய இலை தழைகளைத் தின்ற உண்ட மயக்கம்.
ஆட்டைக் குறிவைத்த ஒரு மலைப்பாம்பு ஆட்டின் உடலைச் சுற்றியது.
ஆகா… என்ன சுகம். கொழுத்த ஆட்டிற்கு குளுமையாக இதமாக இருந்தது.. பாம்பு தன்னை நன்கு சுற்றிக்கொள்ள இடம் கொடுத்தது.
என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே என்று ஆச்சரிய ஆராய்ச்சியில் இறங்கிய ஆடு மறுகணம் நெருக்கப்பட்டு நொறுக்கப்பட்டது. அலறித் துடித்து மடிந்தது.
அநேக வேளைகளில் நாமும் இப்படியே பாவசுகத்தில் உழன்று இன்புறுகிறோம்.
கொடிய முடிவு ஏற்படும்வரை கொள்ளிவாய் பிசாசை நம் வாழ்வில் அனுமதிக்கிறோம். பின்பு விடபட முடியாமல் தவிக்கிறோம்.
சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து நியாயத்தீர்ப்பிற்கு முந்திக்கொள்ளும்… (1.கொரி.5:24).