1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22
2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள்.
3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9
4. சோதோம் மனிதருக்குக் குருட்டாட்டம் உண்டானது. ஆதி.19:11
5. சோதோம் கொமோரா பட்டணங்கள் வான அக்கினியால் அழிக்கப்பட்டது. ஆதி.19:24,25, உபா.29:23
6. லோத்தின் மனைவி உப்புத்தூணானது. ஆதி.19:26
7. ஈசாக்கு பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டபின் தப்பினது. ஆதி.22:1-12
8. கர்த்தர் ஆகாரின் கண்களைத் திறந்தது. ஆதி.21:19
9. யாக்கோபு வானளாவும் ஒரு பெரிய ஏணியைச் சொப்பனம் கண்டது. ஆதி.28:12
10. யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனங்களின் அர்த்தம் சொன்னது. ஆதி.41:1-28
11. ஒரேபில் முட்செடி எரியாதிருந்தது. யாத்.3:1-5
12. மோசே சிறுவயதில் பாதுகாக்கப்பட்டது. யாத்.2:1-10
13. மோசேயின் கோல் சர்ப்பமானது. யாத்.4:2-5
14. மோசேயின் கையில் வெண்குஷ்டம் வந்தது. யாத்.4:6,7
15. ஆரோனுடைய கோல் மந்திரவாதிகளின் கோலை விழுங்கியது. யாத்.7:10-12
16. மந்திரவாதிகளின் கோல் சர்ப்பங்களானது. யாத்.7:12
17. எகிப்தில் உண்டான பத்து வாதைகள். யாத்.7:8,9,10,11 அதி.யாத்.13:20-22
18. மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் வழிகாட்டினது. யாத்.13:20-22
19. சங்கார தாதன் இஸ்ரவேலரை அழிக்காமல் பாதுகாத்தது. யாத்.12ம் அதிகாரம்
20. செங்கடல் இரண்டாகப் பிரிந்ததும், பார்வோனின் சேனைகள் செங்கடலில் மாண்டதும். யாத்.14:21-30, 15:18, 78:13, 74:13, 66:6, 106:9
21. மாரவின் கசப்புத்தண்ணீர் மதுரமானது. யாத்.15:22-25
22. காடைகளும் மன்னாவும் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது. யாத்.16:31-36
23. கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டது. யாத்.17:5-7, எண்.20:8-12
24. அமலேக்கியரை இஸ்ரவேலர் ஜெயித்தல். யாத்.17:8-16
25. ஆரோனின் கோல் மட்டும் துளிர்த்து, பூத்து வாதுமை பழம் தந்தது. எண்.17:1-13
26. கோராகையும் அவன் கூட்டாளிகளையும் (250 பேர்) பூமி வாயைத் திறந்து விழுங்கிப்போட்டது. எண். 6:31-35, 26:9-11
27. இஸ்ரவேலரின் முறுமுறுப்பினால் கர்த்தர் வாதையினால் அவர்களை அழித்தது. எண்.16:41-50
28. கொள்ளிவாய் சர்ப்பங்களால் கடிபட்ட இஸ்ரவேலர் வெண்கல சர்ப்பத்தைப் பார்த்து பிழைத்தது. எண்.21:6-9
29. பிலேயாமின் கழுதை பேசினது. எண்.22:28-31
30. ஆரோனின் குமாரர் அந்நிய அக்கினியால் மாண்டது. லேவி.10:1-3
31. மிரியாமின் குஷ்டரோகம் மோசேயின் ஜெபத்தால் குணமானது. எண்.12:10-15
32. மோசே மரித்தபோது அவனைக் கர்த்தர் அடக்கம் பண்ணினது. உபா.34:1-6
33. இஸ்ரவேலரும், எலியாவும், எலிசாவும் யோர்தான் நதியைக் கடந்துச் சென்றது. யோசு.3:9-17, 2.இராஜா.2:7-14
34. எரிகோவின் கோட்டை மதில்கள் விழுந்தது. யோசு.6:6-21
35. யோசுவா சூரியனையும், சந்திரனையும் நிறுத்தினது. யோசு.10:12-14
36. சிம்சோனின் தாகம் தீர்க்கப்பட்டது. நியா..15:17-19
37. சிம்சோன் 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்துக் கட்டினது. நியா.15:4,5
38. சிம்சோன் ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றது. நியா.15:15,16
39. சிம்சோனின் அற்புத ஜடையின் பெலன். நியா.16 அதிகாரம்.
40. சிம்சோன் கண் குருடாக்கப்பட்டிருந்தும், வீட்டின் தூணைப் பிடித்து சாய்த்து பெலிஸ்தரில் 3000 பேரைக் கொன்றது. நியா.16:23-30
41. கிதியோனின் தோலில் மட்டும் பனியும் பூமி காய்ந்தும் இருந்தது. அதுபோல பூமியின்மேல் பனியும் தோல் மட்டும் காய்ந்தும் இருந்தது. நியா.6:36-40
42. கிதியோனின் சேனைகள் 300 பேர் பானைகளை உடைத்து மீதியானியர்களின் சேனைகளை முறியடித்தது. நியா.7:16-22
43. பரலோகத்திலிருந்து அக்கினி இறங்கினது, (பல இடங்களில்) நியா.6:21, 13:19,20, லேவி.9:24, 1.இராஜா.18:38, 2.நாளா.7:1
44. கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்த பெத்ஷிமேசின் மனுஷர் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை கர்த்தர் அடித்தது. 1.சாமு.6:19
45. தாகோன் விக்கிரகம் கர்த்தருடைய பெட்டிக்கு முன் விழுந்து நொறுங்கினது. 1.சாமு.5:1-12
46. சிம்ரி என்ற இஸ்ரவேலன் கஸ்பி என்ற மீதியானிய ஸ்திரீயுடன் செய்த வேசித்தனத்தினால் உண்டான வாதையினால், இஸ்ரவேலரில் இருபத்து நாலாயிரம் பேர் செத்துப்போனது. எண்.25:8-18, 1.கொரி.10:8
47. சாமுவேல், எலியா முதலியோரின் ஜெபத்தால் கர்த்தர் மழையை அனுப்பினது. 1.சாமு.12:18, 1.இராஜா.18:41-45
48. தாவீது, எலியா, சாலொமோன் ஆகியோரின் ஜெபத்தால் கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பினது. 1.இராஜா.18:37,38, 1.நாளா.21:25,26, 2.நாளா.7:1
49. இளைஞனான தாவீது ஒரு கவண் கல்லினால், பெலிஸ்திய வீரனான கோலியாத்தோடு யுத்தம்பண்ணி அவனை வீழ்த்தி, அவன் பட்டயத்தாலே அவனை வெட்டிக் கொன்றுபோட்டது. 1.சாமு.17ம் அதிகாரம்.
50. தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலைப் பிடித்தபோது, தாவீது. சுரமண்டலத்தை எடுத்துவாசித்தபோது, பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க அவன் ஆறுதலடைந்து சொஸ்தமானது. 1.சாமு.16:23, 18:10-12
51. கர்த்தருடைய பெட்டியை பிடித்ததினால் கர்த்தர் அவனை அடித்தது. 2.சாமு.6:6-8
52. யெரொபெயாமின் கை முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப் போனது. 1.இராஜா.13:4-6
53. விதவையின் பானையில் மாவும் எண்ணெயும் குறையாமல் இருந்தது. 1.இராஜா.17:10-16
54. எலியாவுக்கு காகங்கள், அப்பமும் இறைச்சியும் கொடுத்துப் போஷிப்பித்தது. 1.இராஜா.17:1-10
55. விதவையின் இறந்துபோன மகனை எலியா உயிர்ப்பித்தது. 1.இராஜா.17:17-24
56. அகசியாவின் ஊழியக்காரர் எலியாவின் வார்த்தையால் கொல்லப்பட்டது. 2.இராஜா.1:9-12
57. எலியா சுழல் காற்றில் பரலோகத்துக்கு ஏறிப்போனது. 2.இராஜா.2:11
58. எலிசா தண்ணீரை ஆரோக்கியமாக்கினது. 2.இராஜா.2:19-22
59. எலிசாவைப் பரியாசம்பண்ணின 42 பிள்ளைகளைக் காட்டுக் கரடிகள் பீறிப்போட்டது. 2.இராஜா.2:23,24
60. தண்ணீரினால் ஒரு பெரிய சேனையை அழித்தல். 2.இராஜா.3:16-26
61. விதவையின் எண்ணெய் பெருகினது. 2.இராஜா.4:1-17
62. சூனேமியாளின் இறந்த மகனை எலிசா எழும்பப்பண்ணினது. 2.இராஜா.4:25-35
63. எலிசா பானையிலிருந்த சாவை மாற்றினது. 2.இராஜா.4:40,41
64. இருபது வாற்கோதுமை அப்பங்களால் 100 பேர் சாப்பிட்டு மீதியும் எடுத்தது. 2.இராஜா.4:12-44
65. நாகமானின் குஷ்டரோகம் யோர்தானில், ஏழுதரம் மூழ்கி குணமானது. 2.இராஜா.5:1-18
66. கேயாசி குஷ்டரோகியானது. 2.இராஜா.5:20-27
67. எலிசா யோர்தான் நதியில் விழுந்த கோடரியை மிதக்கப்பண்ணினது. 2.இராஜா.6:1-7
68. எலிசா சத்துருக்களுக்குக் கண் மயக்கம் உண்டாகச் செய்தது. 2.இராஜா.6:12-18
69. சீரிய சேனையோடுள்ள யுத்தம். 2.இராஜா.7:5-7
70. எலிசாவின் எலும்புகளில் பட்டபோது மரித்தவன் உயிர்த்தது. 2.இராஜா.13:20,21
71. பெக்கா என்ற ஒரே மனுஷன், ஒரே நாளில் யூதா மனுஷரில் மகாவீரராயிருந்த இலட்சத்திருபதினாயிரம் பேரைக் கொன்றுபோட்டது. 2.நாளா.28:6
72. அசீரியரின் பாளையத்தில் இலட்சத்தெண்பதினாயிரம் பேரைக் கர்த்தருடைய தூதன் சங்கரித்தது. 2.இராஜா.19:35
73. எசேக்கியா பிளவை வியாதியிலிருந்து குணமானது. 2.இராஜா.20:1-7
74. ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் சாயை பத்துப்பாகை பின்னிட்டு திரும்பும்படி செய்தது. 2.இராஜா.20:9-11
75. உசியா குஷ்டரோகியானது. 2.நாளா.26:16-21
76. அஞ்சனக்காரி சாமுவேலை எழும்பப்பண்ணினது. 1.சாமு. 28:7-20
77. சாத்தான் இஸ்ரவேலைத் தொகையிட தாவீதை ஏவிவிட்டது. 1.நாளா.21:1-14
78. யோசபாத்தின் சேனைகள் கர்த்தரைப் பாடித் துதித்தபோது மோவாப்பியரும் அம்மோன் புத்திரருமான சத்துருக்கள் ஒருவொருக்கொருவர் வெட்டுண்டு மரித்தது. 2.நாளா.20:1-30
79. எலியா எழுதின நிருபம் யோராம் இராஜாவிடம் வந்தது. 2.நாளா.21:1-12:20
80. ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் அவனையே தூக்கிப்போட்டது. எஸ்.6:14,7:10
81. யோபுவைச் சாத்தான் கொடிய பருக்களால் வாதித்ததும் பின்பு அவன் இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கப்பட்டதும். யோபு. 2:7, 42:12
82. தீச்சூளையிலிருந்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் விடுவிக்கப்பட்டது. தானி.3:19-27
83. ஒரு கையுறுப்பு பெல்ஷாத்சார் இராஜாவுக்கு விரோதமாக சுவரில் எழுதினது. தானி.5:24-30
84. தானியேல் சிங்கக் கெபியிலிருந்து தப்பினது. தானி.6:16-23
85. யோனா மீனின் வயிற்றில் 3 நாள் உயிரோடிருந்து, பின்பு வெளியே கக்கிப்போடப்பட்டது. யோனா 1:17
86. ஆமணக்குச் செடியைக் கர்த்தர் முளைப்பித்தது. யோனா 4:6-10
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more