ஒரு பெரிய கப்பல் கடலில் மூழ்கியது. பலர் உயிரிழந்தனர்.
இங்கிலாந்து நாட்டிலுள்ள தென்மேற்குக் கடலில் நிகழ்ந்த இந்த சோக நிகழ்ச்சியினால் இங்கிலாந்து தேசமே துயரில் ஆழ்ந்தது.
கப்பல் மாலுமியின் உதவியாளரான ஓர் இளைஞனின் உயிர் ஆச்சரியமாகத் தப்பியது. அவர் கடலில் விழுந்தவுடன் கடலிலுள்ள ஓர் பாறையைப் பற்றிக் கொண்டார். மறுநாள் அவர் மீட்கப்படும்வரை பாறையிலேயே தொங்கினார்.
குளிர் உங்களை நடுக்கவில்லையா? என்று ஆச்சரியத்தோடு இங்கிலாந்திலுள்ள ஓர் நாத்தீகர் கேட்டபோது அவர் சொன்னார்: குளிரினால் எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் நான் பற்றியிருந்த பாறையான கன்மலையில் நடுக்கம் ஏற்படவில்லை என்றார்.
தேவனே என் கன்மலையும், என் இரட்சிப்புமானவர்…… நான் அசைக்கப்படுவதில்லை (சங்.62:2)