நீதி.11:1-31
வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும். தீமைகள் தீமையான பலன்களையே தரும். ஆகவே நீதிமொழிகள் 10ம் அதிகாரத்தில் நாம் வாசித்த வண்ணம் நல்லவர்களாய் இருப்பது மாத்திரமன்று, நமது கரத்தின் கிரியைகளும் நன்மையானவைகளாகவே இருக்க வேண்டும். நமது கிரியைகளுக்குத் தகுந்தவாறு தான் கர்த்தர் நமக்குப் பயன் அளிக்கின்றார். (வெளி 2:12) நமது கரத்தின் கிரியைகள் நன்மையாக இருக்க வேண்டுமானால் நாம் நமது உள்ளத்திலே சிந்தனையிலே செயலிலே நல்லவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய கிருபையே நம்மை நல்லவர்களாய் வாழ வைக்கிறது. நமது நித்தியத்தை நிர்ணயிக்கும் நமது செயல்களிலே நாம் கவனமாய் இருப்போமாக. நீதியைச் செய்கிறவன் நித்தியத்திலே ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பானே! (நீதி 11:30)