பக்தியுள்ள மக்கள் இரட்சிக்கப்பட பல வழிகளையும், நிபந்தனைகளையும் சொல்லுகிறார்கள். ஆனால் தேவன் தமது புத்தகத்தில் கொடுக்கும் நிபந்தனைகளைச் சொல்லுகிறவர்கள் வெகு சிலரே. உனக்குப் பிரியமான ஒரு சபையைச் சேர்ந்து கொள்; புது வாழ்க்கை நடத்து, பத்துக் கற்பனைகளைக் கொள், சுத்தமான சன்மார்க்கனாய் இரு – என்று பலவித வழிகளை மனிதன் சொல்லுகிறான். ஆனால் இவைகளில் ஒன்றும் உன் ஆத்துமாவைக் காப்பாற்ற முடியாது.
இயேசு நாதர் ஐசுவரியமுள்ள வாலிபனை நோக்கி, “கற்பனைகளைக் கைக் கொள்’ என்றார். அவன், “இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டு வருகிறேன்;. இன்னும் என்னிடத்தில் என்ன குறைவு உண்டு?’ என்று கேட்டான். இயேசு “இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு, பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். பண ஆசை இவ் வாலிபன் புதுப் பிறப்பின் அனுபவத்தைப் பெறக்கூடாதபடி தடைசெய்தது. (லூக்.18:18-24). இயேசு நிக்கொதேமுவிடம்,”ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணவோ, அதில் பிரவேசிக்கவோ முடியாது” என்றார் (யோவா.3:3-7). நிக்கொதேழுவுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் இயற்கைப்படியே பிறப்பது எப்படி என்று நினைத்தான். இயேசு, “ஒருவன் ஜலத்தினாலும் (மறு ஜனன சுத்திகரிப்பினால், அல்லது வசனத்தினால்) ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்’ என்றார். இரட்சிப்பு ஒருவனை தேவ இராஜ்யத்தில் ஒரு அம்சமாக்கும்;. தேவ சபையில் அங்கத்தினாக்கும். அப். 2:47).
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனே இரக்கம் பெறுவான்.” நீதி.28:13. பாவஞ் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதி முதல் பாவம் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்; ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்ய மாட்டான்” (1.யோவான் 3:8,9) என்று தேவன் சொல்லுகிறதைப் பலர் நம்புகிறதில்லை. நாம் ஒன்றில் தேவனுடைய குடும்பத்தில் இருக்க வேண்டும், அல்லது சாத்தானுடைய குடும்பத்தில் தான் இருக்க முடியும். எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும், நாம் பாவத்தில் ஜீவித்தோமானால், நாம் பிசாசின் பிள்ளைகளே. நாம் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம். தேவ ஆவியினால். தேவனுடைய குடும்பத்தில் பிறக்கவேண்டும். ‘எல்லா மனிதரும் நாள் தோறும் பாவம் செய்கிறார்கள்” என்றோ, அல்லது,“ ஒரு முறை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற ஒருவன், பின் என்ன வாழ்க்கை நடத்தினாலும் இரட்சிக்கப்பட்டவனே” என்றோ போதிக்கும் போதகர்கள், அப்போதனையினால் நாசமான ஏராளமான ஆத்துமாக்களின் இரத்தப் பழிக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். இவை ஆத்துமாக்களை வஞ்சிக்கும் சாத்தானின் உபதேசங்கள். “நீங்கள் என் பட்டசத்தில் நிலைத்திருந்தால், மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” என்று தேவன் தெளிவாகக் கூறியுள்ளார். “ஆகையால் தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய்” ரோமர் 11:22. தேவனுடைய வசனத்தின் திட்ட வட்டமான உபதேசங்களைச் சிலர் நம்பாததால், தேவ வசனம் அவமாகுமோ? யாரை நம்பப் போகிறோம்? தேவனையா, மனிதனையா? “நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே” என்று இருமுறை இயேசு சொன்னார். (யோவா 5:14, 8:11) கூடாத ஒன்றை இயேசு கட்டளையிட்டிருப்பாரோ?
பரலோகத்தை நமது வீடாக்க வேண்டுமா? நம் பாவங்களுக்காக தேவனுக்கேற்ற துக்கம் அடைய வேண்டும். அவற்றை அறிக்கை செய்து விட்டு விட வேண்டும். ஆவியினால் பிறக்க வேண்டும். பின் அவருடைய வசனத்தில் முற்று முடிய நிலைத்திருக்க வேண்டும்.
பாவியே, இயேசு உன்னை நேசிக்கிறார். நீயும் நானும் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி அவர், தம் ஜீவனைக்கொடுத்தார்.