Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

இரட்சிக்கப்படுவதின் நிபந்தனைகள்

Webmaster by Webmaster
February 17, 2023
in துண்டுப் பிரதிகள்
0
பகைவரை நேசிக்கும் இறையன்பு
75
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பக்தியுள்ள மக்கள் இரட்சிக்கப்பட பல வழிகளையும், நிபந்தனைகளையும் சொல்லுகிறார்கள். ஆனால் தேவன் தமது புத்தகத்தில் கொடுக்கும் நிபந்தனைகளைச் சொல்லுகிறவர்கள் வெகு சிலரே. உனக்குப் பிரியமான ஒரு சபையைச் சேர்ந்து கொள்; புது வாழ்க்கை நடத்து, பத்துக் கற்பனைகளைக் கொள், சுத்தமான சன்மார்க்கனாய் இரு – என்று பலவித வழிகளை மனிதன் சொல்லுகிறான். ஆனால் இவைகளில் ஒன்றும் உன் ஆத்துமாவைக் காப்பாற்ற முடியாது.

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

இயேசு நாதர் ஐசுவரியமுள்ள வாலிபனை நோக்கி, “கற்பனைகளைக் கைக் கொள்’ என்றார். அவன், “இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டு வருகிறேன்;. இன்னும் என்னிடத்தில் என்ன குறைவு உண்டு?’ என்று கேட்டான். இயேசு “இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு, பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். பண ஆசை இவ் வாலிபன் புதுப் பிறப்பின் அனுபவத்தைப் பெறக்கூடாதபடி தடைசெய்தது. (லூக்.18:18-24). இயேசு நிக்கொதேமுவிடம்,”ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணவோ, அதில் பிரவேசிக்கவோ முடியாது” என்றார் (யோவா.3:3-7). நிக்கொதேழுவுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் இயற்கைப்படியே பிறப்பது எப்படி என்று நினைத்தான். இயேசு, “ஒருவன் ஜலத்தினாலும் (மறு ஜனன சுத்திகரிப்பினால், அல்லது வசனத்தினால்) ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்’ என்றார். இரட்சிப்பு ஒருவனை தேவ இராஜ்யத்தில் ஒரு அம்சமாக்கும்;. தேவ சபையில் அங்கத்தினாக்கும். அப். 2:47).

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனே இரக்கம் பெறுவான்.” நீதி.28:13. பாவஞ் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதி முதல் பாவம் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்; ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்ய மாட்டான்” (1.யோவான் 3:8,9) என்று தேவன் சொல்லுகிறதைப் பலர் நம்புகிறதில்லை. நாம் ஒன்றில் தேவனுடைய குடும்பத்தில் இருக்க வேண்டும், அல்லது சாத்தானுடைய குடும்பத்தில் தான் இருக்க முடியும். எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும், நாம் பாவத்தில் ஜீவித்தோமானால், நாம் பிசாசின் பிள்ளைகளே. நாம் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம். தேவ ஆவியினால். தேவனுடைய குடும்பத்தில் பிறக்கவேண்டும். ‘எல்லா மனிதரும் நாள் தோறும் பாவம் செய்கிறார்கள்” என்றோ, அல்லது,“ ஒரு முறை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற ஒருவன், பின் என்ன வாழ்க்கை நடத்தினாலும் இரட்சிக்கப்பட்டவனே” என்றோ போதிக்கும் போதகர்கள், அப்போதனையினால் நாசமான ஏராளமான ஆத்துமாக்களின் இரத்தப் பழிக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். இவை ஆத்துமாக்களை வஞ்சிக்கும் சாத்தானின் உபதேசங்கள். “நீங்கள் என் பட்டசத்தில் நிலைத்திருந்தால், மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” என்று தேவன் தெளிவாகக் கூறியுள்ளார். “ஆகையால் தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய்” ரோமர் 11:22. தேவனுடைய வசனத்தின் திட்ட வட்டமான உபதேசங்களைச் சிலர் நம்பாததால், தேவ வசனம் அவமாகுமோ? யாரை நம்பப் போகிறோம்? தேவனையா, மனிதனையா? “நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே” என்று இருமுறை இயேசு சொன்னார். (யோவா 5:14, 8:11) கூடாத ஒன்றை இயேசு கட்டளையிட்டிருப்பாரோ?

பரலோகத்தை நமது வீடாக்க வேண்டுமா? நம் பாவங்களுக்காக தேவனுக்கேற்ற துக்கம் அடைய வேண்டும். அவற்றை அறிக்கை செய்து விட்டு விட வேண்டும். ஆவியினால் பிறக்க வேண்டும். பின் அவருடைய வசனத்தில் முற்று முடிய நிலைத்திருக்க வேண்டும்.

பாவியே, இயேசு உன்னை நேசிக்கிறார். நீயும் நானும் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி அவர், தம் ஜீவனைக்கொடுத்தார்.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

மன்னனின் மதியீனம்

June 10, 2025
மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ்...

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails
Next Post
இயேசுவைத் தேடிடுவாய்….

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?