Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

மன்னனின் மதியீனம்

Webmaster by Webmaster
June 10, 2025
in துண்டுப் பிரதிகள்
0
மன்னனின் மதியீனம்
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ் அவதிகள் பல பட்டு வாடி வதங்கினர். பலர் கூடித் திட்டமிட்டு அவிவரசனைக் கொலை செய்யச் சதி செய்தனர். அவ்வரசன் இதனை அறியாதிருந்த போதிலும் அதி தூரத்தில் அத்தனே என்னும் பட்டணத்தில் உள்ள அவனது ஆத்மநண்பன் இச்சதியைக் குறித்துக் கேள்வியுற்று ஒரு கடிதம் எழுதி அவனுக்கு ஒரு தூதுவன் மூலம் அவசரமாய் அனுப்பினான்.

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

அத்தூதுவன் வந்த தினத்தில் அரசன் தனது நண்பர்களுக்கு பெரிய விருந்தொன்று ஆயத்தப்படுத்தி முடிவில் ஏராளமான மதுவருந்திக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் அத்தூதுவன் கடிதத்தை அரசனிடம் கொடுத்து, “இதை அனுப்பியவர் இது அதிமுக்கிய காரியமானதால் நீர் இதனை உடனே படித்து ஆவன செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றார்” என்று கூறினான். அவ்வரசனோ அக்கடிதத்தில் உள்ள ஜீவன் அளிக்கும் செய்தியைப் பற்றி கிஞ்சிற்றும் உணராமல் “முக்கியமான காரியங்களை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு புசித்துக் குடித்து இன்புற்றிருப்பேன்” என்று சொல்லி அக்கடிதத்தைத் தூர எறிந்து விட்டான். அன்று இரவில் தானே அவனுடைய பகைஞர் அவன் குடித்து வெறித்திருந்த சமயம் அவன்மீது பாய்ந்து கொன்று விட்டனர். அந்தோ! அவன் ஜீவன் தப்பு அவனது நண்பனால் அருளிய எச்சரிப்பான நற்செய்தியை அல்லத் தட்டினதால் அவன் மாண்டு போனான்.

இதனை வாசிக்கும் அன்புள்ள நண்பரே, இவ்வரசனைப் போலவே நீரும்’ கிஞ்சிற்றேனும் கவலையின்றி சிற்றின்ப வாழ்வை நுகர எண்ணி உலகமே சதம் என்று அதன்பின் சென்று, பின் ஒரு நாள் நமது ஆத்மிக இரட்சிப்பைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்நாளை வீணாளாக்கிக் கொண்டு வருகின்றீரோ? சற்றே நின்று யோசித்துப் பாரும் நாளை நம்முடையதன்று. இன்றே இவ்வுலகில் நமது கடைசி நாளாக இருந்தாலும் இருக்கலாம்: யாரறிவார்? ஒரு வேளை நான் இப்படிச் சொல்வது உமக்குச் சற்று வருத்தமாய் இருக்கலாம். ஆயினும் இது உண்மையல்ல என்று சொல்ல உமது இதயம் துணியவில்லையே! ஆகவே இன்றே உமது நித்தியத்திற்கடுத்த காரியங்களைப் பற்றி நீர் சிந்திக்க வேண்டும். நித்தியத்திலே நாம் கடவுளிடம் சென்று இன்புற்றிருக்க வேண்டுமென்றால், நம்முடைய பாவங்களுடன் செல்ல முடியாது. நாம் மோட்சம் அடைய வேண்டுமென்றால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். இவ்வுலகின் கண் பாவப் பாரத்தால் சோர்ந்து அழியும் மானிடரை மீட்கவே இயேசு கிறிஸ்து மானிட அவதாரம் எடுத்து, நமது பாவங்களை தம்மீது ஏற்று, நமக்குப் பதிலாக சிலுவையில் தம்மையே தியாக பலியாக்கி, மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து, இன்றும் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் மீட்டு இரட்சித்து, பாவத்தின்மீது வெற்றி தந்து, தம்முடன் இவ்வுலகிலும் மறு உலகிலும் இனிது வாழும் பெரும் பாக்கியத்தைக் கொடுக்க வல்லவரும் நல்லவருமாய் இருக்கின்றார்.

உமது பாவங்களை அவரிடம் இன்றே அறிக்கை செய்து, அவரை உமது சொந்த தெய்வ இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரைத் தொழுது அவரையே சேவிக்க முற்படுவீராக. அப்பொழுது இம்மையில் தூயவாழ்க்கையும் பேரின்பத்தையும் மறுமையில் மோட்சானந்த பாக்கியத்தையும் அடைவீர். அவ்வரசனைப் போன்று முக்கியமானகாரியங்களை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இந்த இரட்சிப்பின் நற்செய்தியை தள்ளிவிட வேண்டாம் “ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் …………. நீங்கள் எவைகளினின்று (பாவத்திலிருந்து) விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ … அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் என்றும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமான்களாக்கப்படுகிறான். (அப்போஸ்தலர். 13:38-39) என்று சத்தியவேதம் வெளிப்படுத்துகிறது. ஆகவே இயேசு கிறிஸ்துவை இன்றை உமது இரட்சகராய் ஏற்றுக் கொள்வீராக.”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” அர்போஸ்தலர். 16 : 31)

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails

தேவன் ஏன் மனிதனானார் ?

May 30, 2025
தேவன் ஏன் மனிதனானார் ?

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்தார். அண்ட சராசரங்களையும் மனிதனையும் படைத்த தேவன், ஏன் மனிதனாக அவதரிக்க வேண்டும்? முதலாவதாக, தேவன் தேவனாகவே தம்மை வெளிப்படுத்துவாரெனில் ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலிருக்கும் அந்தத் தேவனை, பாவங்களில்...

Read moreDetails
Next Post
Smith´s Daily Remembrancer – January 1

Smith´s Daily Remembrancer – June 10

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?