வழியொன்று தெரியாது தடுமாறும் வேளை
முன்னின்று வழிகாட்ட என் மேய்ப்பன் வருவார்
கதியென்று அவரண்டை நீ செல்லும்போது
பதி நானே என்றுன்னை பரிவோடு அழைப்பார்
பழி பாவம் இதயத்தை தொடுகின்ற வேளை
பரிதாபம் கொண்டுன்னைத் தன்னோடு அணைப்பார்
சதிகாரர் வலைகளுக்கு நீக்கலாக்கி உன்னை
அருள் நாதன் அன்புடனே அரவணைத்து நிற்பார்
பொல்லாங்கன் உனை எதிர்த்து வருகின்ற நேரம்
அவர் திருவசனப் பட்டயத்தைப் கையிலேந்திக்கொள்ளு
இறக்கும் வரை உன்னுடனே வசனமிருக்கும்போது
எதற்குப் பயம் கலங்கிடாதே கர்த்தர் உன்னோடிருப்பார்