Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

இரயில் பயணம்

Webmaster by Webmaster
January 26, 2023
in துண்டுப் பிரதிகள்
0
பகைவரை நேசிக்கும் இறையன்பு
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று பயணஞ்செய்த பெட்டியில் பெரிய சத்தமும் கூச்சலும் எழுந்தது. எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். இரண்டு பயணிகள் ஒரு இருக்கைக்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இருவரும் பதிவு செய்த சீட்டை எடுத்துக்காட்டினர். இது எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் என இருவரும் உரிமைபாராட்டினர். காரணம் என்னவென்றால் இருக்கையின் ஒரே இலக்கமே இருவருடைய பயணச்சீட்டிலும் காணப்பட்டது.பயணிகளாலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. ஓருவர் மற்றவருடைய சாமான்களையெல்லாம் எடுத்து நடை பாதையில் எறிந்தார். சிலர் ரயில்வேயின் தவறு என்றனர். சிலர் கணனியில் இத்தகைய தவறுகள் ஏற்படாது என்றனர். சிறிது நேரத்தில் டிக்கட் பரிசோதகர் அங்கே வந்தார். முதலில் அவரும் குழப்பமடைந்தாலும் சற்று நேரத்தினுள் தவறு என்ன என்பதைக் கண்டுகொண்டார். சண்டையிட்ட பயணிகளில் ஒருவர் தவறான இரயிலில் ஏறியிருந்தார். வன்மையாக சண்டையிட்டவரே இப்பெரிய தவறைச் செய்திருந்தார். தவறைச் சுட்டிக்காட்டிய போது அவர் முகம் கறுத்தது. வெட்கித் தலைகுனிந்தார். அடுத்த ஸ்டேசனில் அவர் இறங்க வேண்டியதாயிற்று. எந்தப்பெரிய தவறு. எவ்வளவு அவமானம்! எத்தனை கொடிய விளைவு!

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

எல்லா இரயில்களும் ஒரே ஊர்களுக்குச் செல்வதில்லை. எல்லாப் பெருந்தெருக்களுமே ரோம் நகரத்தை இணைப்பதில்லை. எல்லா நதிகளும் ஒரே கடலுக்குள் பாய்வதில்லை. எல்லா இரயில்களும் ஒரேமாதிரியாகவே இருக்கும். எல்லா பெருந்தெருக்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எல்லா நதிகளும் ஒரேமாதிரியாகவே இருக்கும். ஆயினும் இவை சென்றடையும் இடங்கள் வெவ்வேறாகவே உள்ளன. நாம் சரியான வண்டியில், சரியான பாதையில் முறைப்படி பயணம் செய்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். இல்லையேல் முடிவில் ஆபத்தாக முடிந்துவிடும். அந்த இரயில் பயணியைப் போல வாழ்வை நஷ்டத்திலும் இழப்பிலும் அவமானத்திலும் கொண்டுவந்து விடும். உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. அது சரியானதா? தவறானதா? என்பதையும் காலதாமதமின்றி உறுதி செய்வது அவசியம்.

வாழ்க்கையும் ஒரு பயணம் தான்.

“ பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை” எமது வாழ்க்கைப் பயணமும் இந்த இரயில் பயணத்துக்கு ஒத்ததாகவே உள்ளது. அப்படியானால் நாம் செல்லும் இலக்கு என்ன? என்பதை தீர்மானித்து, சந்தேகத்துக்கு இடமின்றி சரியான பாதையையும் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா? வேதம் இரண்டு வழிகளைக் காட்டுகிறது. 1.இடுக்கமான ஜீவவழி 2.விசாலமான மரணவழி இரண்டு பாதைகளும் வெவ்வேறான இடத்துக்கு செல்கின்றன. குறுகிய பாதை கவர்ச்சியின்றி இடுக்கமும் துன்பமும் நிறைந்ததாக இருப்பினும் முடிவோ நித்திய மகிழ்ச்சியுள்ள பரலோக வாழ்வாகும். இவ்வழியில் பயணம் செய்வோர் சிலரே! மாறாக கவர்ச்சியுள்ள விசாலமான பாதையில் பயணிப்போர் பலர். அது பாவமும், சுயநலமும், களியாட்டும், சிற்றின்பமும் நிறைந்த பாதையாக உள்ளது அதன் முடிவோ நித்திய அழிவு.

நித்திய ஜீவ பாதை எது?

அப்படியானால், ஆசீர்வாதமுள்ள ஜீவ பாதை எது நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆம். அவரே நித்திய வாழ்வுள்ள தேசத்துக்கு வழியாக உள்ளார். மனிதர்களாகிய நாம் வழி தப்பி அலைகிறவர்களாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்மைத் தேடி வந்த மேய்ப்பராகிய ஆண்டவரின் அங்கலாய்ப்பை கேளுங்கள்: என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலைய விட்டார்கள்@ ஒரு மலையிலிருந்து மறு மலைக்குப் போனார்கள்@ தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். (எரே.50:6) ஆம்! தவறான வழியில் சென்று கொண்டிருக்கிற நம்மை நல்வழிக்குத் திருப்பி ஜீவனுள்ளோர் தேசமாகிய பரலோகத்துக்கு எம்மை அழைத்துச் செல்லும்படியாக அவரும் ஏழைமானிடனாக பாவமின்றி பரிசுத்தராகப் பிறந்து போதனை செய்து, மனிதகுலத்தின் பாவநோயை நீக்கி பரிசுத்தப்படுத்தும்படியாக மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களைத் தாமே ஏற்று சிலுவையில் பலியாகி மனிதஇனத்தை பரலோகம் செல்ல தகுதிப்படுத்தினார்.

பரிசுத்த தேவனுடன் சேர முடியாதிருந்த மனித குலத்தின் பாவங்கள், சாபங்கள், அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பாவமறியா பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தனது மரணத்தினால் ஒப்புரவாக்கி பரலோகத்துக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தினார். உலகத்திலுள்ள எந்த மனிதனாவது, எந்த இனமாவது, எந்த பாஷைக்காரராவதுவது பரலோகம் செல்ல விரும்பினால் அதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழியாக இருக்கிறார்.

இந்த உலகத்திலே வேறு எந்த மார்க்கமோ, எந்தக் கடவுளோ, எந்தவொரு அவதாரமோ பரலோகத்துக்கு வழியை அமைக்க முடியாது. ஆம்! சர்வலோகப் பாவங்களுக்காக பலியான தெய்வம் இயேசு ஒருவரே! உலகத்திலே பலி எடுத்த கடவுளர் உண்டு. எமக்காகப் பலியாகி பாதை அமைத்த இறைவன் இயேசு ஒருவரே!

அன்பானவர்களே! நீங்கள் இயேசுவை பின்பற்றுவீர்களானால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சரியான வழியைத் தெரிந்து கொண்டவர் ஆவீர்கள். நீங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுப்போவதில்லை. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வதோடு உங்கள் சந்ததியையும் மீட்டுக்கொண்டவராவீர்கள் நீங்கள் செய்யப்போவது சமய மாற்றமல்ல பாதை மாற்றமே. இது ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமேயன்றி ஒரு சமயக்கொள்கை அல்ல.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை@ நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை-(அப்.4:12) தங்களின் சரியான பயணத்தை இரட்சகர் இயேசு கிறிஸ்துவுடன் தொடர எங்கள் வாழ்த்துக்கள்!

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

மன்னனின் மதியீனம்

June 10, 2025
மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ்...

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails
Next Post
பகைவரை நேசிக்கும் இறையன்பு

மெய்யான ஒளி

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?