நிம்ரோத்
நோவாவின் சந்ததியில் நிம்ரோத் என்பவன் பராக்கிரமசாலியாய் இருந்தான். அவன் பாபிலோனை ஸ்தாபித்தான். அவன் தன்னைச் சூரியக் கடவள் என்று சொல்லி, விக்கிரக வணக்கத்தையும் ஸ்தாபித்தான். அது பாபிலோனிய ரகசியம் என்று அழைக்கப்பட்டது. இது ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தான் பாபிலோனியாவில் ஜனங்களை மறுபடியும் வஞ்சிக்கும் செயலாகும். பாபிலோனில் ஆரம்பிக்கப்பட்ட விக்கிரக வணக்கம் உலகத் தேசங்களில் எங்கும் பரவிற்று.
ஆனாலும் கர்த்தர் பாபிலோனிலிருந்து தமக்கென்று ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டார்.