மார்ச் 3
மார்ச் 3 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்.5:4) நாம் வியாதியாகவோ, கவலையாகவோ இருக்கும்போது நம்முடைய நண்பர்களின் ஜெபங்களினால் ஆறுதலும் உற்சாகமும் அடைவதுண்டு. நான் ஜெபிக்க முடியாதபடி பலவீனனாக இருந்தேன். தியானிக்க இயலாதபடி நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்பொழுது எனக்காக அங்குள்ள மருத்துவ தாதிமார் ஜெபித்தனர். அதனால் நான் புதுப்பெலன் அடைந்தேன். நம்முடைய பெலவீனங்களை உணர்ந்து, நமக்காகப் பாரப்பட்டு ஜெபிக்கும் ஆண்டவர் பரலோகத்தில் இருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து பரிதாபப்படுகிறார் என்பதைக் கேள்விப்படும்போது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! நாம் படும்…