May

மே 12

மே 12 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத்.24:46). இயேசு கிறிஸ்து தம் போதனைகள் யாவற்றிலும், தான் இவ்வுலகத்தை விட்டுப்போன்பின்பு மீண்டும் இரண்டாம் முறை வரப்போவதைக் குறித்து அடிக்கடி போதித்திருக்கிறார். மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்.16:27). தமது ஊழியத்தின் கடைசி நாட்களில் சிலுவைப்பாடுகள் சமீபித்து வருகையில் அவர் தமக்கு நம்மை ஊழியம் செய்யும்படி அடிக்கடி கூறியுள்ளதைக் காணலாம். உண்மையுள்ள…

May

மே 11

மே 11 ….. தேவனோ…. அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதி.50:20). இதே சத்தியத்தை நாம் ரோமர் 8:28ல் காணலாம். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்பது நமக்குப் புதிதான வெளிப்பாடல்ல. இது புதிய ஏற்பாட்டுக் காலத்திற்குரியதல்ல. யோசேப்பின் இந்த அனுபவம் பழைய ஏற்பாட்டிலேயே மிகச் சிறந்தது எனலாம். தன் சகோதரர்களால் அவன் வெறுக்கப்பட்டான். பகைமையின் உச்சக்கட்டத்தில் அவனை அடிமையாக விற்றுப்போட்டனர். அடிமையாக இருந்த யோசேப்பு தொடர்ந்து அடிமையாகவே இராமல் அந்நாட்டின் அரியணைக்குச் செல்லும்…

May

மே 10

மே 10 …. கிறிஸ்து இயேசுவை கவனித்துப் பாருங்கள். இருவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார் (எபி.3:1-2). தேவ குமாரனும், மனுஷகுமாரனுமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு உண்மையுள்ளவராயிருந்தார். ஆதியிலிருந்த அவரது தன்மையைப்பற்றி நீதிமொழிகளில் நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன். நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன் (8:30) எனக் கூறுகிறது. இதையே நம் அண்டவரும் யோவான் 17:5ல் உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்…

May

மே 9

மே 9 …. அவன் தூஷிக்கட்டும்…. ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் (2.சாமு.16:11-12). தாவீதுக்கு விரோதமாக யாவரும் எழும்பினர். சீமேயீ என்பவன் கோபத்துடன் இழிவாகப் பேசினான். உடைந்த உள்ளத்துடன் இருந்த மன்னன் தாவீது பொறுமையுடன், அவன் என்னைத் தூஷிக்கட்டும் விட்டுவிடுங்கள் எனக் கூறினான். இழிவான தூஷணத்திற்கும், எதிர்ப்புக்கும் ஒப்புக்கொடுத்தவர்களில் தாவீதும் ஒருவன். மோசே தன் காலத்தில் இதே போன்று துன்பங்களைச் சகித்துக்கொண்டான். அவனை…

May

மே 8

மே 8 …. இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன் (மாற்.14:4). 1956ம் ஆண்டு செவ்விந்தியர்களால் ஐந்து மிஷனறிகள் கொல்லப்பட்டனர் எனக் கேள்விப்பட்டவுடனே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான். இழந்துபோனதைத் தேடிச் சென்ற இரட்சகருக்கென ஒப்புக்கொடுத்த இந்த வாலிபரின் வாழ்வு ஏன் வீணாகவேண்டும்? அதன்பின்புதான் யூதாஸ் காரியோத் கேட்ட கேள்வியும் இதுதான் என்று நினைத்துக்கொண்டேன். யூதாஸ் தந்திரமாகக் கணக்குப் போட்டுப் பார்த்து, இந்த தைலத்தை விற்று கிடைக்கும் பணத்தை ஏழைகட்குக் கொடுக்கலாம் என்று கூறினான். உடனே…

May

மே 7

மே 7 …. காணதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோ.20:29). ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர்யுத்த நாளிலே முதுகு காட்டினார்கள் (சங்.78:9). அவர்களிடம் எல்லா ஆயுதங்களும் இருந்தன.ஆயினும் கீழ்ப்படியத்தக்கதான இருதயம் இல்லாதிருந்து. நாம் விசுவாசத்தில் நடப்போமாயின்தோல்வியும், குழப்பமும் ஏற்பட்டாலும் பேதுருவைப்போன்று நாமும், ஆண்டவரே யாரிடத்தில்போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில், உண்டே, நீர் ஜீவனுள்ள தேவனுடையகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் (யோ.6:68-69) எனக்கூறமுடியும். நமக்கு வெளியே எதிர்ப்புக்கள் பெருகி, பின்வாங்கிச் செல்லும்படிநெருக்குகையில்தான் நாம் வல்லமையள்ள தேவனுடைய…

May

மே 6

மே 6 …. ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? (யோபு 11:3). தேவனுக்கென வாழ்வோரை எதிர்க்கும் மக்களை நாம்காலங்கள்தோறும் காண்கிறோம். சர்வ வல்லவரை எதிர்த்து நிற்கும் இந்தச் சுயநலக்காரர்கள்தங்கள் அயலாரைத் தங்கள் கண்கண்டபடியும், காதினால் கேட்டதின்படியும் கொடுமையாகத்தீர்ப்பிடுகின்றனர். புண்பட்ட மக்களை இவர்கள் மீண்டும் வேதனைப்படுத்துகின்றனர். பலவீனரைப் பாடுபடுத்துகின்றனர். ஆழ்ந்த துக்கத்திலிருப்போரை எழவிடாமல்அமிழ்த்துகின்றனர். சிட்சிக்கப்படுவோரைச் சிரமப்படச் செய்கின்றனர். இது காலங்கள்தோறும் நடந்துவரும் சம்பவங்களே.சோப்பார் யோபுவைப் பரிகாசம் செய்தான். தாத்தான் மோசேயைக் கேலி செய்தான். வயதுசென்ற தாவீதைச் சிமேயீ இழிவுபடுத்தினான். இரட்சகரை…

May

மே 5

மே 5 தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர் நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி…. போ.. என்றார் (2.சாமு.5:23). நம்முடைய வாழ்விலும் தேவன் இவ்விதமாக வழிநடத்தியுள்ளார் என்பதை நாம் அறிவோம். நாம் கடந்த நாட்களில் இவ்விதமான இக்கட்டுகள் நேரிட்டபோது, அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதை அறிவோம். ஆகவே, நாம் அதேபோல் நடந்துகொள்ள விரும்புவதுண்டு. ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் எதிரிகள் வந்து பரவியபோது தாவீது எதிரிகளை முகமுகமாக சந்திக்க நேரிட்டது. அப்பொழுது அவன் தேவனிடம், போகலாமா எனக்…

May

மே 4

மே 4 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1). பாவத்தை உணர்ந்து மஸ்தாபப்பட்டுவது கடினம். ஆயினும்இது ஆத்துமாவிற்கு பயனுள்ளது. முதலில் கசப்பாகத் தோன்றிடினும் பின் அது இனிமையாக இருக்கும்.குற்றத்தைக் குத்திக்காட்டி வேதனைப்படுத்தும் மனச்சாட்சியை அறியாத இருதயத்தினால்,மன்னிக்கப்பட்ட, குணமாக்கப்பட்ட, இருதயம் அடையும் மகிழ்ச்சியை அறிய இயலாது. இப்படிப்பட்டகுற்றத்தை உணரும் மனச்சாட்சி இல்லையெனில், நாம் கண்களை மூடிக்கொண்டு அழிவுக்கு கொண்டுசெல்லும் விசாலமான வழியில் நடந்துகொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. தாவீது தன் குற்றத்தை மறைக்கவில்லை.…

May

மே 3

மே 3 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான் (லூக்.16:10). மக்கள் நம்மிடம் (வெளிச்சத்தில்) வெளியரங்கத்தில் காணும் யாவற்றையும் நம்மைப்பற்றிக் கொண்டிருக்கும் நல்ல கருத்தையும் கீர்த்தி எனக் கூறலாம். பிற மக்களால் கண்டுகொள்ள இயலாதபடி அந்தரங்கத்தில் (இருளில்) நாம் செய்யும் காரியங்கள்தான் நம்முடைய பண்பை வெளிப்படுத்தும். உண்மையாயிருப்பதைப் பற்றி நமது இரட்சகர் பரிசேயரிடம் போதித்தார். ஏனெனில் அவர்கள், பொருளாசைக்காரராயிருந்தனர் (16:14). இதை இயேசு அவர்களுக்கு மாத்திரம் போதியாமல் நமக்கும் சேர்த்தே கூறியுள்ளார். அழிந்துபோகும் காரியங்களில் சிறிதுகூட உண்மையற்றவர்கள் உயர்ந்த…