March

மனதின் நோக்கம்

2024 மார்ச் 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,2 முதல் 3 வரை) “அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; … சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்” (வசனம் 2). தாவீது தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான காரணத்தை முதலாவது கர்த்தரிடத்தில் விசாரித்தான். சவுல் அரசனாக இருக்கும் போது கிபியோனியரைக் கொன்றுபோட்ட குற்றத்திற்காகப் பஞ்சம் ஏற்பட்டது என்று கர்த்தர் உணர்த்தினார். சவுல் இஸ்ரவேல் நாட்டின் மீது கொண்ட வைராக்கியத்தால் செய்தான்…

March

உடன்படிக்கையில் உண்மை

2024 மார்ச் 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1) “தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்” (வசனம் 1). தாவீது அரசாண்ட காலத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பஞ்சம் உண்டாகியது. முதலிரண்டு ஆண்டுகளில் அவன் அந்தப் பஞ்சத்தை இயல்பானதாக எடுத்துக்கொண்டான். மூன்றாம் ஆண்டும் தொடர்ந்தபோதோ அவன் அதைக் குறித்து கர்த்தரிடம் விசாரித்தான். பல நேரங்களில் நாமும் குறைவுகளோ, கஷ்டங்களோ, பிரச்சினைகளோ உண்டாகும்போது அவற்றை இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்கிறோம்.…

March

ஆலோசனை முக்கியம்

2024 மார்ச் 24 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,23 முதல் 26 வரை) “யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்” (வசனம் 23). தாவீது மீண்டும் அரசராகப் பொறுப்பேற்ற பின்னர் தன்னுடைய அமைச்சரவையை சற்று மாற்றி அமைத்தான். இந்த அமைச்சரவையில் யோவாப், பெனாயா, அதோராம், சேவா, சாதோக், அபியத்தார், ஈரா ஆகியோருடைய பெயர்களைக் காண்கிறோம். தாவீது கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவனாகவும், புத்திசாலித்தனமும் சாதுர்ய ஞானமுள்ளவனாயிருந்தாலும் தனியொருவனாக ஒரு நாட்டை…

March

சமாதானத்தை நாடுவோம்

2024 மார்ச் 23 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,14 முதல் 22 வரை) “அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்” (வசனம் 16). சேபா ஒளிந்துகொண்டிருந்த ஆபேல் பட்டணத்தை யோவாப் சுற்றி வளைத்தான். அவனை அந்த நகரத்தோடு சேர்த்து அழிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை எடுத்தான். ஆனால் அங்கிருந்த ஒரு புத்தியுள்ள பெண்ணால் இந்த அழிவு தடுக்கப்பட்டது. “பூர்வகாலத்து ஜனங்கள்…

March

வஞ்சகம் வேண்டாம்

2024 மார்ச் 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,8 முதல் 13 வரை) “யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, … தாடியைப் பிடித்து,.. வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்” (வசனம் 9 முதல் 10).     மக்கள் பிளவுபட்டபோது, அந்த வாய்ப்பை பிக்கிரியின் குமாரன் சேபா தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொண்டான். ஆனால் மக்களோ கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தும் அதைத் தவறவிட்டுவிட்டார்கள். தாவீது,…

March

தாமதம் வேண்டாம்

2024 மார்ச் 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,3 முதல் 7 வரை) “அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்” (வசனம் 5). தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பி வந்தவுடன், அதைக் காவல்காக்கும்படி வைத்துப் போயிருந்த பத்து மறுமனையாட்டிகளை வரவழைத்து அவர்கள் அனைவரையும் தனியே வீட்டுச் சிறையில் அடைப்பதுபோல அடைத்துப் பராமரித்தான் (காண்க: வசனம் 3). தன் மகன் அப்சலோம் இவர்களிடம் தவறாக நடந்துகொண்டதினித்தம், தாவீதும் அவர்களிடத்தில் பிரவேசிக்க…

March

கிரியையோடுள்ள விசுவாசம்

2024 மார்ச் 20 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,1 முதல் 2 வரை) “அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்” (வசனம் 1). அப்சலோமால் உண்டான பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதற்குள் பென்யமீன் கோத்திரத்து சேபாவினால் அடுத்த பிரச்சினை எழும்பியது. அவன் தற்செயலாய் அங்கே இருந்தான், ஆயினும் அவன் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். பட்டயம் உன் வீட்டை விட்டு என்றென்றைக்கும் நீங்காது…

March

கோபம் கொள்ளாமை

2024 மார்ச் 19 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,40 முதல் 43 வரை) “இதற்காக நீங்கள் கோபிப்பானேன்” (வசனம் 42). தாவீது யோர்தானைக் கடந்து கில்காலுக்கு வந்தான். யூதா கோத்திரத்தார் ராஜாவை முதலாவது வரவேற்று அழைத்துச் செல்லவேண்டும் என்பதில் மும்முரமாயிருந்தார்கள். ஆனால் தங்கள் சகோதரராகிய பிற இஸ்ரவேல் மக்கள் இதைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறினார்கள். இஸ்ரவேலர் வந்து, “எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்து வந்தது என்ன?” என்னும் கேள்வியை…

March

பிறர் நலன் நாடுதல்

2024 மார்ச் 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,31 முதல் 39 வரை) “இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்” (வசனம் 37). தாவீது எருசலேமுக்கு மீண்டும் ராஜாவாகத் திரும்பி வருகையில் நடைபெற்ற நிகழ்வுகள், அதாவது சீமேயிக்கு மன்னிப்பு, மேவிபோசேத்துக்கு நீதி வழங்குதல், பர்சிலாவுக்கு வெகுமதி வழங்குதல் போன்றவை நம்முடைய ஆண்டவருடைய இரண்டாம் வருகையில் நடைபெறப் போகிற காரியங்களுக்கு ஒத்ததாக இருக்கின்றன. தாவீது…

March

சுயவெறுப்பின் வாழ்க்கை

2024 மார்ச் 17 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,24 முதல் 30 வரை) “இன்னும் நான் (மேவிபோசேத்) ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்” (வசனம் 28). யோனத்தானின் மகனும், சவுல் வீட்டாரில் உயிரோடு இருக்கும் கடைசி வாரிசும், தாவீதின் அரண்மனையில் நாள்தோறும் பந்தியில் பங்குபெற்றவனுமாகிய மேவிபோசேத் ராஜாவை சந்திக்க வந்தான். ராஜா அப்சலோமுக்குத் தப்பி ஓடுகையில் தானும் உடன் செல்வதற்கு ஆயத்தமாயிருந்தான். ஆனால் இவனுடைய வேலைக்காரனாகிய சீபாவினால் ஏமாற்றப்பட்டதுமின்றி, இவனைப்…