April

நீதியின் வாழ்க்கை

2024 ஏப்ரல் 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,2 முதல் 4 வரை) “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (வசனம் 2). “இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன்” என்னும் அடைமொழி அவனுக்குப் பொருத்தமானது.  பாடல்கள் எழுதுவதும், அவற்றிற்கு இசை அமைப்பதும் ஒரு தனித்துவமான திறன். தாவீது இந்தத் தாலந்தை கர்த்தரிடமிருந்து அற்புதமாகப் பெற்றிருந்தான். தாவீதால் எழுதப்பட்ட பெரும்பாலான சங்கீதங்கள் கர்த்தரைப் பற்றிய…

April

நல்லதொரு முடிவு

2024 ஏப்ரல் 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,1) “தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று” (வசனம் 1). தாவீதுடைய கடைசி வார்த்தைகள். மரணப்படுக்கையில் இருந்து பேசிய இறுதி வார்த்தைகள் அல்ல. மாறாக தன் கடைசி நாட்களில் கர்த்தர்மீது அவன் கொண்டிருந்த வாஞ்சையையும் அவருக்காக அவன் கொண்டிருந்த ஏக்கத்தையும் பிறருக்குப் பறைசாற்றும் தீர்க்கதரிசன வார்த்தைகள். இவை நம்முடைய மனதைக் கவரும் அறிவார்த்தமான வார்த்தைகள். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதன்…

April

தெய்வீக பாதுகாப்பு 

2024 ஏப்ரல் 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,31 முதல் 51 வரை) “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (வசனம் 31). இருளில் இருக்கிறவனுக்கு அடுத்த அடி எடுத்துவைப்பதற்கான பாதை தெரிந்துவிட்டது. ஆயினும் அதில் நம்பிச் செல்ல முடியுமா? கர்த்தர் நமக்கு வெளிச்சத்தைத் தருவாரானால் நாம் நிச்சயமாகவே நம்பிச் செல்லலாம். கண் தெரியாத ஒரு குருடனுக்கு இன்னொரு குருடன் வழிகாட்ட முடியாது. அவ்வாறு சென்றால் இருவரும்…

April

தெய்வீக வல்லமை

2024 ஏப்ரல் 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,28 முதல் 30 வரை) “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (வசனம் 29). கர்த்தர் எளியவர்களைக் காப்பாற்றுகிறவர் மட்டுமன்று, மேட்டிமையான கண்களை உடையவர்களைத் தாழ்த்துகிறவராகவும் இருக்கிறார். எவர்கள் மேட்டிமையான கண்களை உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் கர்த்தருடைய பார்வையிலிருந்தும் தப்பமுடியாது என்ற நம்பிக்கையைத் தாவீது கொண்டிருந்தான். இங்கே எளியவர்கள் என்னும் வார்த்தை நவீன மொழிபெயர்ப்புகளில் தாழ்மையானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தன்னைத்தான் குறைத்து மதிப்பிடுகிறது…

April

மனிதனும் கடவுளும்

2024 ஏப்ரல் 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,21 முதல் 27 வரை) “கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (வசனம் 21). “என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (வசனம் 21) என்று சொல்லும் போது, தாவீது பாவமே செய்யாத பரிபூரணமானவன் என்ற பொருளில் சொல்லவில்லை. எல்லா மனிதர்களைப் போலவே அவனும் ஒரு பாவியான மனிதனே. ஆயினும் பாவங்களை ஒத்துக்கொள்வதிலும், அதை அறிக்கையிடுவதிலும் உண்மையாயிருந்தான். அவன்…

March

உணர்விலிருந்து ஒரு பாடல்

2024 மார்ச் 31 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,5 முதல் 20 வரை) “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று” (வசனம் 7). செங்கடலைக் கடந்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் பாடியதுபோலவும், எதிரிகள் அழிந்ததால் தெபோராளும் பாராக்கும் பாடியதுபோலவும், தன் ஜெபங்களுக்குப் பதில் கிடைத்த பின்னர் அன்னாள் பாடியதுபோலவும் தாவீது தன்னுடைய ஆபத்தில், இக்கட்டான…

March

அனுபவத்திலிருந்து ஒரு பாடல்

2024 மார்ச் 30 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,1 முதல் 4 வரை) “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்” (வசனம் 2).     இந்தப் பாடல் தாவீதின் இறுதி வார்த்தைகளாகத் தோன்றுகிறது. தாவீதின் வாழ்க்கையில் இதுவரையிலும் கர்த்தர் அவனை நடத்தியதற்காக அவனது உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு சுருக்கமான நன்றிப் பாடலாக இதைக் கருதலாம். இந்தப் பாடல், சில கருத்துகளைத் தவிர, அவன் இயற்றிய பதினெட்டாம் சங்கீதத்தைப் போலவே உள்ளது. பதினெட்டாம் சங்கீதம் அவர்…

March

ஓய்வுபெறுதல்

2024 மார்ச் 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,15 முதல் 22 வரை) “தாவீது விடாய்த்துப்போனான்” (வசனம் 15). நாட்டின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருந்த சவுலின் குடும்பத்தாரில் ஏழு பேர் தூக்கிலிடப்பட்ட பின்னர், தாவீது எதிர்கொள்ள வேண்டிய அடுத்த பிரச்சினை காத்துக்கொண்டிருந்தது. “பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்” (வசனம் 15) என்று வாசிக்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய போரை நடத்த வேண்டும். இந்த வேதபகுதி, பெலிஸ்தியரின் நான்கு ராட்சதர்கள் தாவீதுக்கும் அவனுடைய சேவகர்களுக்கும் எதிராக வந்தார்கள்…

March

காரணத்தை ஆராய்தல்

2024 மார்ச் 28 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,10 முதல் 14 வரை) “அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து … அடக்கம்பண்ணுவித்தான்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்” (வசனம் 13 முதல் 14). கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிலிடப்பட்ட எழுவரில் இருவரின் தாய் ரிஸ்பாள் அந்தப் பாறையின்மீது இரட்டுப் புடவையை விரித்து, அந்த உடல்களை பறவைகளோ, விலங்குகளோ  சேதப்படுத்தாவண்ணம் பாதுகாத்தாள். அறுவடை தொடங்கியது முதல் மழை பெய்யும்வரை…

March

பரிகாரம் செய்தல்

2024 மார்ச் 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,4 முதல் 9 வரை) “நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்” (வசனம் 3). தாவீது ஒரு ராஜாவாக நீங்கள் இன்னின்னபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிடாமல், நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படி நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கிபியோனியரிடம் தாழ்மையுடன் கேட்டான். ஒரு ராஜாவாக அல்லாமல், ஒரு வேலைக்காரனைப் போல நான் என்ன செய்ய வேண்டும்…