தொழு நோயாளிகளைக் கையாளுதல்
(வேதபகுதி: எண்ணாகமம் 5:1-31) “குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும், பாளையத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு” (வச. 2). தொழு நோய்க்கு ஆட்பட்டவர்கள், உதிரப்போக்கு உள்ளவர்கள் மற்றும் பிணத்தினால் தீட்டுப்பட்டவர்கள் ஆகிய மூன்று விதமான நபர்களை குடியிருப்புகளை விட்டு தனிமைப்படுத்த வேண்டும். இவைகள் பெரும்பாலும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்று பரவக்கூடிய நோய்கள். குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இல்லாத காரணத்தாலும், பிறருக்கு இத்தொற்றுகள் பரவாமல் இருக்கவும், அல்லது நோயின் பாதிப்பினால் துர்நாற்றத்தினால் வேறு எவரும் பாதிக்கப்படாமல்…