மூன்று நாள் பயணம்
(வேதபகுதி: எண்ணாகமம் 10:11-36) “அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்று நாள் பிரயாணம் போனார்கள்; மூன்று நாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படி அவர்கள் முன் சென்றது” (வச. 33). ஒவ்வொரு கோத்திரத்தாரும், அவரவருடைய இடத்தில், அவரவருடைய கொடிகளுடன், ஆசரிப்புக்கூடாரத்தைப் பின்பற்றி அணிவகுத்துச் செல்வது எத்தனை அற்புதமான காட்சி. கர்த்தருடைய மக்கள், நாங்கள் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள் என்று அறிக்கையிடுகிறார்கள். தங்களுடைய ஐக்கியத்தின் அழகையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறார்கள். விசுவாசிகள் இவ்வாறு செல்வதன் மூலம்…