இஸ்ரயேலை ஆசீர்வதிப்பதை கர்த்தருக்குப் பிரியம்
(வேதபகுதி: எண்ணாகமம் 23:1-12) “தேவன் சபிக்காதவனை நான் சபிப்பது எப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பது எப்படி” (வச. 8). பாலாக் இஸ்ரயேல் மக்களை சபிக்க வேண்டும் என்று விரும்பினான்; கர்த்தரோ அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். பாலாக் எந்த மனிதனுக்கு பணம் கொடுத்து சபிக்க ஏற்பாடு செய்தானோ அந்த பிலேயாமைக் கொண்டே தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க வைக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய நலனுக்காக யாரைக் கொண்டும் கிரியை செய்ய முடியும் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டை இங்கே காண்கிறோம்.…