பெசலெயேலும் அவனுடைய குழுவினரும்
(வேதபகுதி: யாத்திராகமம் 35:30-36:8) “பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலைடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்” (வச. 36:2). ஆசரிப்புக்கூடாரத்தின் திட்டப் பொறியாளர் தேவனே ஆவார்; பெசலெயேலும் அவனுடைய குழுவினரும் அவர் அருளிய வரைபடத்தின்படி அதை நுட்பமான முறையில் வடிவமைத்த கைவினைஞர்கள் ஆவார்கள். அவ்வரைபடத்தின்படி அவர்கள் ஓய்வில்லாமல், சோர்ந்துபோகாமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொரு அம்சத்திலும் மேசியாவைப் பிரதிபலிக்கிற ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தங்களுடைய ஒவ்வொரு உழைப்பையும் வெளிப்படுத்தினார்கள். கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிற…