01) தேவன் உம்மிடத்திலிருந்து கேட்பதென்ன?
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளிலெல்லாம் நடந்து . அவரிடத்தில் அன்புகூர்ந்து , உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவிப்பதே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் . (உபாகமம் 10:12, 13)
இயேசு அவனிடத்தில் கூறியதாவது : உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு சுடருவாயாக என்பதே. (மத்தேயு 22:37 – 39)
02) தேவனிடத்திலிருந்து மனிதரைப் பிரிப்பது என்ன?
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது . உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (எசாயா 59:2)
03) பாவமென்பதென்ன?
இயேசு கூறியதாவது : மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும் .
விபசாரங்களும் , வேசித்தனங்களும் , கொலைபாதகங்களும் , களவுகளும், பொருளாசைகளும் , துரைத்தனங்களும் கபடும். காமவிகாரமும் , வன்கண்ணும் , தூஷணமும், பெருமையும் , மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும். (மாற்கு 7:21 – 23)
04) பாவம் சகல மனுஷருக்குமுரிய அனுபவமா?
எல்லாரும் பாவம் செய்து . தேவ மகிமையற்றவர்களாகினார்கள் . (ரோமர் 3:23)
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவள் உண்டோ என்று பார்க்க , கர்த்தர் பரலோகத்திலிருந்து
மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். எல்லாரும் வழிவிலகி . ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் . நன்மை செய்கிறவன் இல்லை . ஒருவனாகிலும் இல்லை . (சங்கிதம் 14:2-3)
05) பாவத்தின் பலன் என்ன?
பாவத்தின் சம்பளம் மரணம் . (ரோமர் 6:23)
குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல்
நிலைநிற்கும். (யோவான் 3:36)
06) பாவியையும் அவனுடைய பாவத்தையுங் குறித்து தேவன் நினைப்பதென்ன?
தேவன் …… இப்பொழுதே மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லோருக்கும்
கட்டளையிடுகிறார். (அப்போஸ்தலர் 17:30)
07) பாவத்திற்குப் பரிகாரமாய் தேவன் ஏதாகிலும் செய்திருக்கிறாரா ?
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் . (யோவான் 3:16)
08) இரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி . அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்போஸ்தலர் 16:31)
09) கிறிஸ்துவின் மரணத்தால் இரட்சிப்பு எப்படி அருளப்பட்டிருக்கிறது?
யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு : இதோ , உலகத்தின் பாவத்தைச் சுமந்த தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான் . (யோவான் 1:29)
இரத்தச் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. (பிரெயர் 9:22)
10) இரட்சிக்கப்பட வேறு மார்க்கம் ஏதாவது உண்டா?
நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே …. யன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை . நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும். மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்போஸ்தலர் 4:10, 12)
11) பயபக்தியான எச்சரிப்பு
இயேசு கூறியதாவது : என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது . நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் . (யோவான் 12:48)
12) அன்புடைய இரட்சகரின் அழைப்பு
ஜீவ அப்பம் நானே , என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான் , என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் தாகமடையான் . என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை . (யோவான் 6:35, 37)
இதோ , வாசற்படியில் நின்று தட்டுகிறேன் . ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால்,
அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)