1. ஸ்திரீயின் வித்து. ஆதி.3:15, மத்.1:18,20, 23:5
சர்ப்பத்தின் வித்து. ஆதி.3:15
2. வானத்திலிருந்து வந்தவர். யோ.6:38,51
பாதாளத்திலிருந்து ஏறி வருபவன். வெளி. 11:7,13:1
3. பிதாவின் நாமத்தில் வந்தார். யோ.5:43
தன் சுயநாமத்தில் வருவான். யோ.5:43
4. பிதாவின் சித்தம் செய்தார். யோ.6:38, 8:29
சுயசித்தம் செய்வான். தானி. 11:36, 7:25, 8:12
5. தன்னைத்தான் தாழ்த்தினார். பிலி.2:5
தன்னைத்தான் உயர்த்துவான். 2.தெச.2:4
6. மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். ஏசா.53:1, யோ.1:11
மனுஷரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுஷருடைய புகழ்ச்சிக்குரியவனாயிருப்பான். வெளி.13:3,4,8; 17:13, தானி.8:11
7. இரட்சிக்க வந்தார். லூக்.19:10, 1.தீமோ.1:15
கொல்லவும் அழிக்கவும் வருகிறான். யோ.10:10; வெளி 11:7
8. நல்ல மேய்ப்பன். யோ.10:11,14, எபி.13:20, 1.பேது.5:4,
அபத்தமான மேய்ப்பன் சக.11:16,17
9. மெய்யான திராட்சச் செடி. யோ.15:1
காட்டு திராட்சச் செடி. ஏசா.5:2,3,4
10. சத்தியமுள்ளவர். யோ.14:61, யோ.5:20
பொய்யன். 1.யோ.2:4, 5:19, யோ.8:44
11. தேவனுடைய குமாரன், யோ.3:16, லூக்.1:35
கேட்டின் மகன் 2.தெச.2:3
12. தேவ பக்தியின் இரகசியம் 1.தீமோ.3:16
அக்கிரமத்தின் இரகசியம். 2.தெச.2:7
13. பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தார். அப்.10:38, லூக்.4:18, யோ.3:34
அசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டிருப்பான். வெளி 13:4,5,13, 2.தெச.2:9,10
14. மெய்யான அற்புதங்களைச் செய்தார். யோ.21:25, 20:30
பொய்யான அற்புதங்களைச் செய்வான். 2.தெச.2:9, வெளி 13:13
15. நீதியுள்ள இராஜா. ஏசா.32:1, 1.யோ.1:49, மத்.2:2, யோ.18:37, வெளி 15:3
சூதான பேச்சும் சாமர்த்தியமுமான இராஜா. தானி.8:23,24,25
16. சமாதானப் பிரபு. ஏசா.9:6, யோ.14:27
மூர்க்கமுள்ளவன். தானி.8:23, 9:26
17. தேவனை மகிமைப்படுத்தினார். யோ.17:4
தேவனைத் தூஷிப்பான். வெளி 13:6
18. தேவாலயத்தைச் சுத்திகரித்தார். யோ.2:13-16
தேவாலயத்தை அசுத்தமாக்குவான் (தீட்டுப்படுத்துவான்). 2.தெச.2:4
19. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் மாபெரும் அற்புத அடையாளங்களைச் செய்தார். மத்.12:28, அப்.10:38
பிசாசின் ஆவியினால் பொய்யான அற்புதங்களைச் செய்து ஜனங்களை வஞ்சித்து மோசம் போக்குவான். 2.தெச.2:9, மத்.24:24
20. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் 3 அரை வருஷம் ஊழியம் செய்தார்.
பிசாசின் வல்லமையால் பலங்கொண்டு 3 அரை வருஷம் கிரியை செய்வான்.
21. பாவமற்ற பரிசுத்தர். எபி.7:26
இவன் பெயரே பாவ மனுஷன். 2.தெச.2:13
22. நமக்காகத் தரித்திரரானார். 2.கொரி.8:9
உலக ஐசுவரியம், அவன் ஆதினத்திலிருக்கும். வெளி 13:17-18
23. ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்தார். யோ.10:11
ஆடுகளின் மாம்சத்தைத் தின்பான். சக. 11:16
24. தன்னைத்தான் தாழ்த்தின அவரைத் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார். மேலான நாமத்தை உடையவரானார். பிலி.2:9-11, வெளி 5:12
தன்னைத்தான் உயர்த்தின அவனை எல்லாவற்றிற்கும் கீழாக தேவன் தாழ்த்துவார். வெளி 19:19,20
25. பரலோகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மகிமையின் தேவனுடைய வலது பாரிசத்தில் என்றென்றைக்கும் ஜீவிக்கிறார். அப்.1:9, ரோ.1:5, 8:34, எபி.13:8
தூதனால் பிடிக்கப்பட்டு, கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே என்றென்றைக்கும் வாதிக்கப்பட, உயிரோடே தள்ளப்படுவான். வெளி 19:20