ஒரு காலத்தில் தங்கள் தேவைகளுக்காக மாத்திரம் அன்பு பாராட்டிய நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். உண்மையான ஒரு நண்பர் இல்லாத குறையை நான் உணர்ந்தேன். ஒரு நாள் ஒரு பல்வைத்தியரின் அறையில் என்னைச் சந்தித்த ஒரு சகோதரி கைப்பிரதி ஒன்றை எனக்குத் தந்தாள். அது என் வாழ்நாளில் எனக்களிக்கப்பட்ட முதல் கைப்பிரதியாகும். என் நண்பரை அறிவீரா? என்று அச் சகோதரி என்னிடம் கேட்டாள். அந்தக் கேள்வி என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது.
இயேசுவை ஒரு நண்பராக அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை. உன்னதமான இடங்களில் வசிப்பவரும், காணப்படாதவரும், அறியக் கூடாதவருமான ஒருவராக நான் அவரை எண்ணியிருந்தேன். அவர் எனக்கு உதவக்கூடியவரென்ற எண்ணம் அற்றவனாயிருந்தேன். இந்த நல்ல சகோதரி என்னை இயேசு கிறிஸ்துவண்டைக்கு வழிநடத்தினாள். ஏற்கனவே தாகங்கொண்டிருந்த என் உள்ளத்தை அவருக்குத் திறந்தேன். அவர் என் நல்ல நண்பராயிருக்கிறார்.
உண்மையற்ற, பயனற்ற நண்பரை நம்பி, சோர்ந்த உன் உள்ளத்தில் நல்ல நண்பரை வாஞ்சிக்கிறாயா? இவரே நல்ல நண்பர். இவரை அண்டிக்கொள். உன் பிரச்சனைகளுக்கு நிவாரணமும், உள்ளத்தில் சந்தோஷமும் மெய்ச் சமாதானமும் தருபவர் இவரே. மேலும் எந்தப் பாவியையும் ஏற்றுக்கொள்ளும்படியாக இவர் அன்புமிகுந்தவருமாயிருக்கிறார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்த இயேசு அநேக வியப்பான காரியங்கள் எல்லாம் செய்தார். நோயுற்றவர்களை குணமாக்கினார். குருடரை பார்க்கச்செய்தார். செவிடர்களைக் கேட்கச்செய்தார். ஊமையர்களைப் பேசச்செய்தார். பிறவிச் சப்பாணிகளையும், திமிர்வாதக்காரன் ஆகியோருக்கு தங்கள் வியாதியிலிருந்து விடுதலைகொடுத்தார். மரித்து நான்கு நாட்களாக கல்லறையினுள் நாறிக்கொண்டிருந்த லாசருவை உயிரோடு எழுப்பினார். இயேசுவானவர் செய்த அற்புதங்கள் ஏராளம்! ஏராளம்!! விடுதலையைக் கொடுக்க தம் இருகரம் நீட்டி உன்னை அன்போடு அழைக்கிறார். வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்.11:28). என்று அவர் அன்பாய் வருந்தி அழைக்கிறார்.
எல்லா மனிதரும் பாவிகள் என்று வேதம் போதிக்கின்றது. எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய்…… நீதிமான்களாக்கப்படுகிறார்கள். எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது (ரோமர் 3:23,24,5:12) என்று எழுதியிருக்கிறது. எனவே நீ உன்னை ஒரு பாவி என்று ஒத்துக்கொள்வது, இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்காகச் செய்ய வேண்டிய முதல் கடமையாகும்.
மேலும் கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் (1கொரி 15:3,4) என்று திருமறை கூறுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்ட சிறைச்சாலைக்காரனுக்கு பிரதியுத்தரமாக, பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்றான். ஆகவே உன்னைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிப்பதற்காக இயேசு மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், உயிரோடெழுந்தார் என்பதை நீ விசுவாசிக்கவேண்டும்.
இயேசுவே என் உள்ளத்தில் வந்து தங்கும். என்று விசுவாசத்தோடு வேண்டிக்கொள்வாயானால் அவர் உன் உள்ளத்தில் வந்து தங்குவார். பழைய பாவ எண்ணங்கள் அகன்றுவிட்டதையும், அவருடைய அன்பும் சமாதானமும் உள்ளத்தில் ஆளுகை செய்வதையும் நீ உணரக்கூடும்.