Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

அண்ணா ஆதரியுங்கள்!

Webmaster by Webmaster
February 23, 2025
in துண்டுப் பிரதிகள்
0
அண்ணா ஆதரியுங்கள்!
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்லாண்டுகளுக்கு  முன்பு தமிழகத்தில் இரட்டைச் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். வெளித்தோற்றத்திற்கு இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் குணத்தினாலே அவ்விருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. மூத்தவன் உத்தமனாய் வாழ்ந்து வந்தான். இளையவனோ பஞ்சமாப் பாதகனாய் பல தீய செயல்கள் புரிந்து, தூயவாழ்க்கையற்றும் தனது தனையனுக்குத் தாங்க முடியாத தவிப்பைத் தந்தான்.

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

ஒருநாள் இளையவன் ஒரு சண்டையில் ஈடுபட்டுக் கொடுங்கொலை புரிந்துவிட்டான். அங்கிருந்த மக்கள் கூச்சலிடவே அவன் மிக்க பீதிகொண்டு வீடு நோக்கி ஓடினான். அதைக் கண்ட ஒரு காவற் சேவகனும் சில பொதுமக்களும் அவனைத் துரத்திச் சென்றனர். அவனோ அதிவேகமாய் வீட்டிற்கு ஓடி அண்ணா என்னை ஆதரியுங்கள். நான் ஒரு கொலை புரிந்துவிட்டேன் என்று சொல்லி அவன் கால்களில் வீழ்ந்து கதறினான். தன் தம்பியின் அவல நிலையை ஒரு கணத்தில் உணர்ந்த அண்ணன், தம்பியின் இரத்தக் கறை படிந்த துணிகளைக் கழற்றி தான் அணிந்துகொண்டு, தன்னுடைய உடைகளைத் தம்பிக்குத் தரித்து அவன் கையிலிருந்த கத்தியைத் தன் கையில் எடுத்துத் தெருவில் வந்து காவற்சேவகனிடத்தில் சரண்புகுந்தான். அங்கிருந்தோர் அவன் தான் கொலைபாதகன் என்று எண்ணி, அவனை நையப்புடைத்தனர். பின் அவன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்படத் தீர்ப்பு அளிக்கப்பட்டான். அவன் மரிப்பதற்குமுன் தன் தம்பிக்கு, உனக்குப் பதிலாய் நான் மரிக்கிறேன். இதை நினைத்து ஆவது உத்தமனாய் நடந்துகொள் என்று ஒரு கடிதம் எழுதி இரகசியமாய் அனுப்பி வைத்தான். இதைக் கண்ட தம்பி ஓவென்று கதறி அழுது, மனம் மாறினான்.

அத்தம்பியைப் போலவே மண்ணில் தோன்றிய மக்கள் யாவரும் பல தீய பாவச் செயல்களைப் புரிந்து, நரகத் தண்டனையை அடைய வேண்டியவராயினர். ஆயினும் கடவுள் தமது திவ்ய கிருபையினாலும், அளவற்ற அன்பினாலும் நம்மீது இரக்கம்கொண்டு, இயேசு என்ற நாமத்தில் மண்ணில் தோன்றி, ஒரு பாவமும் அற்றவராய் வாழ்ந்து, அரிய பல அற்புதங்களை ஆற்றி, உன்னத உபதேசங்களை அன்புடன் அருளிச் செய்து, முடிவில் நம்மை மீட்கும் கிருபாதாரப் பலியாகத் தம்மையே சிலுவையில் பலிகொடுத்தார். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2.கொரி.5:21) என்றும் நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படி அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1.பேது.2:24) என்றும் சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ளன.

ஆகவே, நீரும் அத்தம்பியைப் போன்று உமது பாவங்களுக்காகவும், தீய செயல்களுக்காகவும் உண்மையில் மனம் வருந்தி, எல்லாம் வல்ல இறைவனுடைய பாதக்கமலங்களை தழுவி, அவரிடம் உமது பாவங்களை அறிக்கையிட்டு, அவரை உமது உள்ளத்தில் உறையும் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராகில், அவர் உமது பாவம் யாவையும் மன்னித்து, உமக்கு இரட்சிப்பையும், சாந்தியையும் பேரின்பத்தையும் இறுதியில் மோட்சத்தையும் தருவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர் கள் (அப்.16:31).

இன்றே. நீர் இறைவன் இயேசு இரட்சகரை உமது சொந்தத் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராக.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

மன்னனின் மதியீனம்

June 10, 2025
மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ்...

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails
Next Post
நாள் 1 – ஆதியாகமம் 1-3

ஆதியாகமம் 36

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?