நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33
பயப்படாதிருங்கள் – பயப்படாதிருங்கள் – பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து பகுதியிலும் காணப்பட்டு இளைஞர்கள், முதியவர்களையும் ஒரே நிலையில் பிடித்துள்ளது. ஆனால் வேதாகமத்தில் 365 தடவைக்குமேல் “பயப்பட வேண்டாம்” என்பதைக் காணலாம் என்று கூறப்படுகிறது, இந்தக் கட்டளை ஆண்டின் ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு எச்சரிக்கை (மத்.10:24-25)
நம்முடைய கர்த்தரைப்போல போல நாம் எவ்வளவு அதிகமாக மாறுகின்றோமோ அவ்வளவுக்கு நாம் மறுபடியும் பிறவாத ஜனங்களால் பகைமையை எதிர்கொள்ளுவோம். சீஷன் தன் எஜமான் அனுபவிக்கும் துன்புறுத்தலிலிருந்து விலக்கப்பட்டவனல்ல. அவர் சிலுவையை எடுக்க வேண்டியிருந்தால், அவரைப் பின்பற்றுபவர்கள் சுதந்திரமாக வெளியே செல்லமுடியுமா? ஆனால் நாங்கள் இயேசுவின் நிமித்தம் உண்மையிலேயே துன்புறுத்தப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் நாம் நமது சுபாவத்தில் எல்லா இடங்களிலும் மனிதர்களைத் தாக்கி ஒருவருக்கொருவர் தாங்கிக்கொள்ளமுடியாது செய்கின்றோம். பெயல்செபூல் என்றால் “அசுத்த்தை ஆளுகை செய்யும் ஆவி” என்றும் “விக்கிரக வழிபாட்டின் இறைவன்” என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு அர்த்தங்களும் இதற்குப் பொருந்தும். எங்கள் தேவனின் மகிமை இங்கே பெயல்செபூல் என்று சொல்லப்படுவதால், மனித இதயம் எப்படியாய் கெட்டுப்போய் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஒரு உற்சாகப்படுத்தல் (மத்.10:26-31)
தம்முடைய சீஷர்கள் பயப்படுவதற்கு வழிவகுக்கக் கூடாது என்பதற்கான மூன்று சரியான காரணங்களை இயேசு இங்கு கூறுகின்றார்:
a. முடிவில் உண்மையே வெல்லும். உண்மையும் பொய்யும் வெளிப்படும் காலம் வரும் (மத்.10:26-27).
b. மனிதர்கள் சரீரத்தைக் கொல்ல முடியும், ஆனால் அவை சக்தியற்றவை, ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கமுடியாது. மிதமிஞ்சிப்போனால் சரீரத்தை மோசமான நிலைக்கு அழிக்கலாம். மரணம் மிகவும் ஆபத்தான விஷயம் அல்ல, தேவனின் கழிவுப்பொருள் (மத்.10:28). ஆகவே, சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்தில் தள்ள வல்லவருக்கே நாம் பயப்பட வேண்டும். நித்திய உலகில் மக்கள் மாமிசரீதியாகவும் ஆவிக்குரியரீதியாகவும் வருந்துவார்கள் என்று தெரிகிறது.
c. பரமபிதா அவர்களைக் கவனித்துக்கொள்கிறார் (மத்.10:29-31). தேவன் ஒரு அடைக்கலான் குருவி பற்றி அக்கறை கொண்டிருந்தால், எவ்வளவு அதிகமாக தனது பிள்ளைகளைக் கவனித்து கரிசனையுள்ளவராயிருப்பார்? அவர்களின் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. இது தேவன் மீதுள்ள விசுவாசத்தை வலுப்படுத்தி, பயத்தை அகற்ற வேண்டாமா?
ஒப்புதல் வாக்குமூலம் (மத்.10:32-33)
இரட்சிப்பின் செய்தியை அறிவிக்க விரும்பினால், இயேசுவின் சீஷர்கள் மனித பயத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இயேசு இரகசிய விசுவாசஅறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பயத்தை சாட்சியோடு இணைக்கமுடியாது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டயை இயேசுவை ஜனங்கள் முன் மேசியாவாக அறிக்கையிடவேண்டும். அவர்கள் சுயவிருப்பத்தோடும் பயமின்றியும் அவர் அவர்களுக்குக் கூறியவற்றை கொடுத்து அவரைத் தேவனும் கர்த்தரும் என்று மகிமைப்படுத்தவேண்டும்.
அவர்கள் அவரை மனிதர்கள், பிரபுக்கள் இராஜாக்களுக்கு முன்பாக அறிக்கையிடும்போது, அவரும் பிதாவின் மூன்பாக அவ்வாறு செய்வார் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் அவர்கள் அவரை மறுதலித்தால், வார்த்தைகளினாலோ செயல்களாலும் அவரிடமிருந்து விலகினால், இயேசு அவர்களை மறுதலிப்பார். மறுதலித்தல் என்பது பேதுரு ஒருமுறை மறுதலித்த நிகழ்வைப்போல ஒன்றல்ல, இயேசு ஒரு மனிதரை அடிப்படையில் அவரது வாழ்க்கையில் இருந்து நிராகரித்து அவரை மறுத்தல் ஆகும்.
சுய பரிசோதனைக்கு:
விசுவாசம் என்பது பயத்திற்கு ஒரு பாதுகாப்பான மருந்தாகும்.