நாள் 33: இரண்டு குருடர்கள் மற்றும் பிசாசினால் கட்டப்பட்ட ஊமையன்; மத்தேயு 9:27-34
ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்:” அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான், ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்”. (ஏசா.35:5-6). இந்தப் பகுதியில் இரண்டு தீர்க்கதரிசனங்களும் நிறைவேறுகின்றன. குருட்டுத்தன்மை அவிசுவாசத்தின் சின்னமாகும் (மத்.15:14) பார்வையடைவது இரட்சிப்பின் அடையாளத்தைக் காட்டுகிறது (மத்.13:16). இரண்டு குணப்படுத்தல்களிலும் இழந்த திறன்கள் மீட்கப்பட்டன.
பரிதாபகரமான ஜோடி (மத்.9:27-31)
பார்வையற்றவராக இருப்பது பாலஸ்தீனத்தில் அசாதாரணமானது அல்ல, இன்றும் பல கிழக்கு நாடுகளில் இதைக் காண்கிறோம். பெரும்பாலும் இது சுகாதாரமின்மையாலும் மற்றும் இந்த பாதிக்கப்பட்டவர்களின் கட்டுகளை அவிழ்க் மிகக் குறைவாகவே கவனமெடுக்கப்பட்டது. ஆனால் இப்போது பார்வையற்ற இருவருக்கும் உதவ ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்தது, இந்த இருவருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் செல்ல அவர்கள் விரும்பவில்லை. ஆகவே அவர்கள் இயேசுவை வீட்டிற்குள் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் இயேசுவைத் “தாவீதின் மகன்” என்று அழைத்ததினால் அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தார்கள். ஒருவேளை அவர்கள் இஸ்ரவேலின் இழந்த மகிமையை மீட்டெடுக்கும் அரசியல் தலைவராகப் பார்த்திருக்கலாம், ஆனால் இயேசுவின் பார்வை எல்லாவற்றிற்கும் முரணானது.
இயேசு முதலில் அவர்களின் நேர்மையை சோதித்தார். உதவிக்கான அவர்களின் அழைப்பிற்கு அவர் உடனடியாக பதிலளிக்கவில்லை, ஆனால் அவரது ஆரம்ப மௌனம் அவர்களது வேண்டுகோளில் விடாமுயற்சியுடன் இருக்க ஊக்குவிப்பதாக இருந்தது. புpற்பாடு“ இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?“ என்று அவர்களிடம் கேட்டு, அவர்களின் விசுவாசத்தைச் சோதித்தார். நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் தம்மைக் கண்டுபிடிக்கும் தமது பிள்ளைகளிடம் இயேசு இன்றும் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார். இத்தகைய நம்பிக்கையைத் தேவன் நம் வாழ்வில் காண்கின்றாரா? இந்த இரண்டு மனிதர்களைப்போல நாமும் பதிலளிக்க முடியுமா? ஆம், ஆண்டவரே, அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை, ஏமாற்றம் அடையவில்லை.
விசுவாசம் என்பது மனிதனின் வெறுமைக்கும் தேவனின் முழுமைக்கும் இடையே இணைக்கும் இணைப்பாகும், அதன் ஒரே மதிப்பு அதில் உள்ளது. தன்னளவில், அதற்கு உண்மையான வலிமையோ சக்தியோ இல்லை. “விசுவாசம் என்பது தேவனின் கிருபையின் நீரூற்றுகளிலிருந்து ஒருவர் வாளியினால் நிறைத்துக்கொள்வதாகும்.”
கட்டப்பட்டிருந்த ஊமை (மத்.9:32-33)
இந்த முக்கியமான குணப்படுத்தும் அற்புதம் பரிசேயர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது, அவர்கள் கண்மூடித்தனமாக இருந்தனர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து, “அவர் பிசாசுகளின் தலைவன் மூலம் பிசாசுகளைத் துரத்துகிறார்” (மத் 9:34) என்ற வார்த்தையை சொல்லிவிட்டனர். இரண்டு குருடர்கள் இயேசுவிடம் வந்தனர். ஊமையான மனுஷனுக்கு அவனது நண்பர்கள் உதவினர். நம் சக மனிதர்களின் ஆன்மீகத் தேவைகளால் நாம் தூண்டப்படுகிறோமா, இயேசு இல்லாமல் அவர்கள் என்றென்றும் தொலைந்துவிட்டார்கள் என்ற கேள்வியால் நாம் உந்தப்பட்டிருக்கிறோமா? இந்த ஊமைத்தன்மையானது பேச்சு உறுப்புகளின் கரிம சிதைவின் காரணமாக மட்டும் ஏற்படவில்லை, ஆனால் அதன் தோற்றம் பேய் பிடித்தலில் இருந்தது என்று கருதலாம் (மத் 9:33). இயேசு அவனுடைய நண்பர்களின் நம்பிக்கையை ஏமாற்றவில்லை, மாறாக பிசாசை துரத்தினார். பின்னர் அந்த நபர் தனது பேச்சை மீட்டெடுத்தார். பிசாசு அவன் தன் எஜமானை இயேசுவில் கண்டுபிடித்ததை அறிந்தான்.
வெவ்வேறு எதிர்வினைகள் (மத்.9:33-34)
இந்த அற்புதங்கள் ஜனக்கூட்டத்தை வியப்பில் ஆழ்த்தின. ஆயினும், பரிசேயர்கள் எல்லையற்ற வெறுப்பு மற்றும் நிந்தனையைச் செய்தனர். அவர்கள் இந்த அற்புதசெயலில் தேவனுடைய வல்லமையான கரங்களைப் பார்க்காமல், பிசாசின் அதிகாரத்தையே கண்டார்கள்.
அவர்கள் மிகுந்த சந்தேகமடைந்திருந்தாலும், இந்தக் குணப்படுத்துதலுக்கு சாட்சியாக இருந்ததால், அவர்களால் அதை மறுதலிக்க முடியவில்லை. எனவே அவர்கள் இயேசுவை இழிவுபடுத்த முயன்றார்கள். நாம் ஒப்புக்கொள்ள விரும்பாத ஒன்றிற்கு எப்போதும் தவறான வெளிச்சத்தை முன்வைக்கமுடியும்.
சுய பரிசோதனைக்கு:
சில நேரங்களில் கர்த்தர் நம்முடைய நேர்மையையும் நம்பிக்கையையும் சோதிப்பதற்காக எங்கள் ஜெபங்களிற்குப் பதிலைத் தாமதப்படுத்துகின்றார்.