நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4
இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப் போல இருந்தபடியால் அவரை அசைத்தது.
கர்த்தருடைய மும்மடங்கு ஊழியம் (மத் 9:35)
போதித்தல், பிரசங்கித்தல் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவை இயேசுவின் ஊழியத்தில் மூன்று முக்கிய பங்குகளாகும். ஒரு போதகராக அவர் வேதவசனங்களை விளக்கி, அவற்றின் உண்மைகளை வாழ்க்கையில் பயன்படுத்தினார். ஒரு போதகராக, அவர் இராஜ்யத்தின் வருகையை சுட்டிக்காட்டி நற்செய்தியை அறிவத்தார். குணப்படுத்தும் கிறிஸ்துவாக அவர் இந்த உலகில் தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தினார். கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல, வார்த்தைகளால் முடிந்துவிடுவதற்கு. இயேசுவின் குணப்படுத்துதல் இயற்கைச் சட்டத்தின் மீறல் அல்ல. மத்.9:5-7 ல் இயேசு ஒரு போதகராகவும், மத்.9:8-9 ல் குணப்படுத்தும் கர்த்தராகவும் காணப்படுகிறார். உலகின் பணித்துறைகள் இயேசுவின் அதிகாரத்தில் இந்த மூன்று ஊழியங்களையும் செய்யும் ஆண்களையும் பெண்களையும் பிடித்துக் கொள்கின்றன – சுவிசேஷம், வேதத்தை விளக்குதல் மற்றும் மருத்துவ உதவியைக் கொண்டுசெல்லுதல்.
இயேசு நல்ல மேய்ப்பர் (மத்.9:36-38)
அவரைச் சந்தித்த மக்களின் ஆன்மீக கஷ்டங்களைக் கண்ட இயேசு மிகுந்த மனதுருக்கமானார். இரக்கம் கொண்டிருப்பது என்றால் சேர்ந்து பாடுபடுவது, இயேசு மனதுருகினார். மனிதர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போலிருந்தார்கள். அவர்கள் தொய்ந்துபோனவர்களும், உதவியற்றவாகளுமாயிருந்தனர், அவர்களுடைய ஆன்மீக கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள யாரும் இல்லை.
இன்றும் கர்த்தர் இந்த உலகில் உள்ள கவலைகள், பசி மற்றும் நோய்களால் பிடிக்கப்பட்ட இந்த சுமையை நாம் எதிர்கொள்ள விரும்புகின்றார். ஆனால் அவரது முக்கிய ஆர்வம் ஆன்மீக தேவை. ஆகவே, தாமதமாகிவிடும் முன்பே அறுவடை வயலுக்கு தொழிலாளர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று ஜெபிக்கும்படி அவர் தம் சீஷர்களை அறிவுறுத்துகிறார். இயேசுவின் வெளிப்படையான கட்டளைக்குக் கீழ்ப்படிகிற பலர் (மத்.9:38) இந்த ஊழியத்தில் கூடிவந்துள்ளனர்.
நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (B) மத்தேயு 9:35-10:4
அப்போஸ்தலர்களின் ஊழியம் (மத்.10:1-4)
இயேசு ஒரு நேரத்தில் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க முடியும் என்பதால், அவருக்கு ஊழியம் செய்ய மக்கள் தேவை அவசியமாயிருந்தது. அதனால்தான் அவர் தம்முடைய சீஷர்களிடமிருந்து பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். ஒரு அப்போஸ்தலர் என்பவர் சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகளின்படி, ஒரு உயர் அதிகாரத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்.
இந்தப் பன்னிரண்டு பேரும் செல்வம் இல்லாதவர்கள், பட்டங்கள் அல்லது சமூக கௌரவம் இல்லாத சாதாரண மனிதர்கள். ஆனால் அவர்களிடம் அநேக மறைந்திருந்த வரங்கள் இருந்தன. அப்போஸ்தலர்களின் நான்கு பட்டியல்களில் எப்போதும் ஒவ்வொன்றிலும் மூன்று குழுக்களிலும் நான்கு ஆண்கள் காணப்பட்டனர். அப்போஸ்தலருடைய நடபடிகளில் யூதாஸ் மட்டும் குறிப்பிடப்படவில்லை. சீமோன் பேதுரு, தலைவர் இயல்புள்ளவர், எப்போதும் முதலில் குறிப்பிடப்படுகின்றார். அவர் எங்கும் மற்ற சீடர்களை விட முதல் உரிமையுள்ளவர் என்று கூறப்படவில்லை.
இந்த பன்னிரண்டு பேருக்கும் பேய்களை விரட்டுவதற்கும் நோயுற்றவர்களை குணப்படுத்துவதற்கும் இயேசு அதிகாரம் கொடுத்தார் (மத்.10:1). அவர்களுடைய பணித்தளம் அவர்களுடைய எஜமானருடையதைப் போலவே பெரியதாகவும் விரிவாகவும் இருந்தது. நாம் ஒன்றை உறுதிப்படுத்த வேண்டும், பொல்லாத ஆவிகளை விரட்டுவதற்கும் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் தெளிவான வேறுபாடு உள்ளது.
சுய பரிசோதனைக்கு:
இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களை அழைப்பதற்கு முன்பு ஒரு இரவை ஜெபத்தில் கழித்தார். நாங்களும் எங்கள் நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு தீவிர ஜெப வாழ்க்கையில் நடக்கின்றோமா?