Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

இரு வழிகள் இரு இலக்குகள்

Webmaster by Webmaster
January 15, 2023
in துண்டுப் பிரதிகள்
0
இரு வழிகள் இரு இலக்குகள்
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

„இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்“.| (மத்தேயு 7:13-14) என்று இறைமகன் இயேசு கிறிஸ்து அருளியுள்ளார்.

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

„நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்| (யோவான் 10:9). „நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரமதகப்பனிடத்தில்) வரான்“ (யோவான் 14:6).

இவ்வசனங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளைக் காண்போம். விண்ணுலக மோட்சவீட்டுக்குச் செல்ல கிறிஸ்துவே வாசலாகவும் வழியாகவும் உள்ளார். இவ்வாசல் வழியே நுழைந்து, குறுகிய பாதையில் செல்கிறவர்கள் பேரின்பவீட்டை அடைவார்கள். கிறிஸ்துவாகிய இவ்வழியினாலன்றி பிற வழிகளில் விண்ணுலகம் செல்லமுடியாது. இயேசு கிறிஸ்துவே உலகின் பாவ இரட்சகர். அதற்காக அவர் சிலுவையாகிய கொலைக் கருவியில் பலியாக மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்துள்ளார். இங்கு தரப்பட்டுள்ள வரைபடத்தில் இச்சத்தியங்கள் விளக்கப்பட்டுள்ளன.

குறுகிய வழி: கிறிஸ்துவே இந்தக்குறுகிய வழி. குறுகிய வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் அலைகின்றனர். பாவம் நீங்கி முக்தி அடைய இயலாமல் மருளுகின்றனர். நண்பரே, இயேசுவே வாசல்: அந்த வாசல் வழியால் நுழையுங்கள். நாம் நமது பாவத்தின் அகோரத்தை மெய்யாக உணர்ந்து, கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தி மரித்துள்ளார் என்பதை நம்புங்கள். இவ்வுண்மையை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, அவரிடம் வாருங்கள். உங்களை அவரிடம் ஒப்படையுங்கள். இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னித்து சுத்திகரிப்பார். மெய்ச்சமாதானமும் இன்பமும் அடைவீர்கள்.

விசாலமான வழி: மனிதன் பின்பற்றக்கூடிய பல தத்துவ ஞானங்கள், மார்க்கங்கள், நற்கிரியைகள் பலவும் உள்ளன. அவை சிந்தையில் நிறைவைத் தருவதாயினும், உள்ளத்தில் சமாதானத்தையும் அமைதியையும் தருவதில்லை. சலிப்பையும் ஏக்கத்தையுமே தருகின்றன.

இவ்வரைபடத்தில் இரண்டு உயரமான மனிதர்கள் தங்கள் முதுகில் பெரிய பாவ மூட்டையைச் சுமந்துகொண்டு, விசாலமான பாதையில் நடந்து செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பற்பல பிரச்சனைகளைச் சுமந்துகொண்டு, பயத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருகின்றனர்.

இதில் ஒரு மனிதன் தனக்குமுன் இருக்கும் மரணமாகிய பெரிய தூணைக் கவனிக்காமல், தலைகுனிந்து செல்கிறான். அவன் அந்த மரணத்தை வெகு விரைவில் சந்திக்க நேரிடும். அவ்வழியின் முடிவோ அழிவு!

இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய நல் வாழ்க்கையின் மூலமாகப் புண்ணியத்தைச் சம்பாதித்து விட்டதாகக் கருதி ஏமாறுகின்றனர். பாவமன்னிப்படையாதவர்கள் பிசாசுக்கும் அவனுடைய தூதுவர்களுக்கும் கடவுள் ஏற்படுத்திய இடமாகிய நரகத்தை நோக்கிச் செல்கின்றனர் (மத்தேயு 25:41). கடவுளின் பார்வையில் நல்லவன் ஒருவனும் இல்லை. நாம் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டிய பாவிகளாகவே உள்ளோம்.

மீண்டும் இந்தப் படத்தை உற்று நோக்குங்கள். இங்கே இரண்டாவது உயரமான மனிதன் இரட்சிப்பை அடையும்படி அந்தக் குறுகிய வாசலைக் கண்டு, கிறிஸ்துவானவர் சிலுவையில் நிறைவேற்றியிருக்கும் புண்ணிய கிரியையை விசுவாசித்து, அந்தக் குறுகிய வாசல் வழியாக நுழைகிறான். அந்த வாசலுக்குள்ளாக நுழைந்தவர்களுடைய முதுகில் பாரம் இல்லையென்பதைக் கவனியுங்கள். „வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்| என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்“ (மத்தேயு11:28).

தம்மிடம் வந்து முக்தி அடையும்படி, வீடுபேறு பெறும்படி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அனைவரையும் வருந்தி அழைக்கிறார். முதலில் சொல்லப்பட்ட வசனத்தை மீண்டும் படியுங்கள்: „இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயி ருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.“ (மத்தேயு 7:13-14).

விசாலமான பாதையில் திரளான மக்கள் செல்கின்றனர். அவர்கள் உயிருள்ள மெய்யான கடவுளிடம் – இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு மனமற்று, ஆன்மீகக் காரியங்களில் அக்கறையற்று, தங்கள் சுய அறிவைச் சார்ந்து, இவ்வுலகச் சிற்றின்பங்களில் உழன்று கொண்டிருக்கின்றனர். ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிப்பவர்கள் சிலர்.

கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுடன் இருப்பது என்பது ஒரு மதத்தை சார்வது அல்ல. இது மதமாற்றமல்ல, மனமாற்றமே ஆகும். சிலுவையில் அவர் சிந்திய குருதியின் மூலம் பாவமன்னிப்பைப் பெற்றவனே மெய்யின்பம் அனுபவிப்பான். இது ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் எடுக்கவேண்டிய தீர்மானமாகும். „ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய அரசைக்காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்“ என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார் (யோவான் 3:3). நீங்களும் இன்று இந்த அனுபவத்திற்குள் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

மன்னனின் மதியீனம்

June 10, 2025
மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ்...

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails
Next Post
சங்கீதம் 143:8

சங்கீதம் 143:8

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?