Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home படித்தவைகள்...

இரயில் பயணம்

Webmaster by Webmaster
November 23, 2014
in படித்தவைகள்...
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று பயணஞ்செய்த பெட்டியில் பெரிய சத்தமும் கூச்சலும் எழுந்தது. எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். இரண்டு பயணிகள் ஒரு இருக்கைக்காக சண்டை யிட்டுக்கொண்டிருந்தனர். இருவரும் பதிவு செய்த சீட்டை எடுத்துக்காட்டினர். இது எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் என இருவரும் உரிமைபாராட்டினர். காரணம் என்ன வென்றால் இருக்கையின் ஒரே இலக்கமே இருவருடைய பயணச்சீட்டிலும் காணப் பட்டது.பயணிகளாலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. ஓருவர் மற்றவருடைய சாமான்களையெல்லாம்எடுத்து நடை பாதை யில் எறிந்தார். சிலர் ரயில்வேயின் தவறு என்றனர். சிலர் கணனியில் இத்தகைய தவறுகள் ஏற்படாது என்றனர். சிறிது நேரத ;தில் டிக்கட் பரிசோதகர் அங்கே வந்தார். முதலில் அவரும் குழப்பமடைந்தாலும் சற்று நேரத்தினுள் தவறு என்ன என்பதைக் கண்டுகொண்டார். சண்டையிட்ட பயணிகளில் ஒருவர் தவறான இரயிலில் ஏறி யிருந்தார். வன்மையாக சண்டையிட்டவரே இப்பெரிய தவறைச் செய்திருந்தார். தவறைச் சுட்டிக்காட்டிய போது அவர் முகம் கறுத்தது. வெட்கித் தலைகுனிந்தார். அடுத்த ஸ்டேசனில் அவர் இறங்க வேண்டியதாயிற்று. எந்தப்பெரிய தவறு. எவ்வளவு அவமானம்! எத்தனை கொடிய விளைவு!

You might also like

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

எல்லா இரயில்களும் ஒரே ஊர்களுக்குச் செல்வதில்லை. எல்லாப் பெருந் தெருக்களுமே ரோம் நகரத்தை இணைப்ப தில்லை. எல்லா நதிகளும் ஒரே கடலுக்குள் பாய்வதில்லை. எல்லா இரயில்களும் ஒரேமாதிரியாகவே இருக்கும். எல்லா பெருந்தெருக்களும் ஒரே மாதிரி யாகவே இருக்கும். எல்லா நதிகளும் ஒரேமாதிரியாகவே இருக்கும். ஆயினும் இவை சென்றடையும்; இடங்கள் வௌ; வேறாகவே உள்ளன. நாம் சரியான வண்டியில், சரியான பாதையில் முறைப்படி பயணம் செய்கிறோமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

இல்லையேல் முடிவில் ஆபத்தாக முடிந்து விடும். அந்த இரயில் பயணியைப் போல வாழ்வை நஷ்டத்திலும் இழப்பிலும் அவமானத்திலும் கொண்டுவந்து விடும். உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. அது சரியானதா? தவறானதா? என்பதையும் காலதாமதமின்றி உறுதி செய்வது அவசியம்.

வாழ்க்கையும் ஒரு பயணம் தான்.
“ பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை” எமது வாழ்க்கைப் பயணமும் இந்த இரயில் பயணத்துக்கு ஒத்ததாகவே உள்ளது. அப்படியானால் நாம் செல்லும் இலக்கு என்ன? என்பதை தீர்மானித்து, சந்தேகத்துக்கு இடமின்றி சரியான பாதையையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

வேதம் இரண்டு வழிகளைக் காட்டுகிறது. 1. இடுக்கமான ஜீவவழி  2. விசாலமான மரணவழி இரண்டு பாதைகளும் வெவ்வேறான இடத்துக்கு செல்கின்றன. குறுகிய பாதை கவர்ச்சியின்றி இடுக்கமும் துன்பமும் நிறைந்ததாக இருப்பினும் முடிவோ நித்திய மகிழ்ச்சியுள்ள பரலோக வாழ்வாகும். இவ்வழியில் பயணம் செய்வோர் சிலரே! மாறாக கவர்ச்சியுள்ள விசாலமான பாதையில் பயணிப்போர் பலர். அது பாவமும், சுயநலமும், களியாட்டும், சிற்றின்பமும் நிறைந்த பாதையாக உள்ளது அதன் முடிவோ நித்திய அழிவு.

நித்திய ஜீவ பாதை எது?

அப்படியானால், ஆசீர்வாதமுள்ள ஜீவ பாதை எது?
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆம். அவரே நித்திய வாழ்வுள்ள தேசத்துக்கு வழியாக உள்ளார். மனிதர்களாகிய நாம் வழி தப்பி அலைகிறவர்களாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்மைத் தேடி வந்த மேய்ப்பராகிய ஆண்டவரின் அங்கலாய்ப்பை கேளுங்கள்: என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலைய விட்டார்கள்@ ஒரு மலையிலிருந்து மறு மலைக்குப் போனார்கள். தங்கள் தொழுவத்தை மறந்து விட்டார்கள். (எரே.50:6) ஆம்! தவறான வழியில் சென்று கொண்டிருக்கிற நம்மை நல்வழிக்குத் திருப்பி ஜீவனுள்ளோர் தேசமாகிய பரலோகத்துக்கு எம்மை அழைத்துச் செல்லும்படியாக அவரும் ஏழை மானிடனாக பாவமின்றி பரிசுத்தராகப் பிறந்து போதனை செய்து, மனிதகுலத்தின் பாவநோயை நீக்கி பரிசுத்தப்படுத்தும்படியாக மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களைத் தாமே ஏற்று சிலுவையில் பலியாகி மனித இனத்தை பரலோகம் செல்ல தகுதிப் படுத்தினார்.

பரிசுத்த தேவனுடன் சேர முடியாதிருந்த மனித குலத்தின் பாவங்கள், சாபங்கள், அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பாவ மறியா பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தனது மரணத்தினால் ஒப்புரவாக்கி பரலோகத்துக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தினார். உலகத்திலுள்ள எந்த மனித னாவது, எந்த இனமாவது, எந்த பாஷைக் காரராவதுவது பரலோகம் செல்ல விரும்பினால் அதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழியாக இருக்கிறார்.

இந்த உலகத்திலே வேறு எந்த மார்க்கமோ, எந்தக் கடவுளோ, எந்தவொரு அவதாரமோ பரலோகத்துக்கு வழியை அமைக்க முடியாது.
ஆம்! சர்வலோகப் பாவங்களுக்காக பலியான தெய்வம் இயேசு ஒருவரே! உலகத்திலே பலி எடுத்த கடவுளர் உண்டு. எமக்காகப் பலியாகி பாதை அமைத்த இறைவன் இயேசு ஒருவரே!

அன்பானவர்களே! நீங்கள் இயேசுவை பின் பற்றுவீர்களானால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சரியான வழியைத் தெரிந்து கொண்டவர் ஆவீர்கள். நீங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுப்போவதில்லை. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வதோடு உங்கள் சந்ததியையும் மீட்டுக்கொண்டவராவீர்கள் நீங்கள் செய்யப்போவது சமய மாற்றமல்ல பாதை மாற்றமே. இது ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமேயன்றி ஒரு சமயக் கொள்கை அல்ல.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப் படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்.4:12)
தங்களின் சரியான பயணத்தை இரட்சகர் இயேசு கிறிஸ்துவுடன் தொடர எங்கள் வாழ்த்துக்கள்!

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

February 5, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...

Read moreDetails

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

January 31, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9 4. சோதோம் மனிதருக்குக் குருட்டாட்டம் உண்டானது. ஆதி.19:11 5. சோதோம் கொமோரா பட்டணங்கள் வான...

Read moreDetails

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

January 23, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான். அப்.7:52 6. யாக்கோபு. யாக்.5:6-8 7. யோவான். 1.யோ.2:1,29

Read moreDetails

சூலமித்தியாளை ஆத்தும நேசர் அழைக்கிறார்! (உன்னதப்பாட்டு)

January 19, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. என் பிரியமே! 1:9,15, 2:2,7,10, 4:7, 5:2, 6:4,10, 7:6 2. என் ரூபவதியே! 1:8,15, 2:10, 4:1,7, 5:9, 6:1, 7:6 3. என் உத்தமியே! 5:2, 6:9 4. என் புறாவே! 1:15, 2:14,...

Read moreDetails

நமது அழைப்பு

January 14, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2 5. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அழைப்பு. 1.தீமோ.6:12 6. இயேசு கிறிஸ்துவுடனே...

Read moreDetails
Next Post

The Last Supper

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?