Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home படித்தவைகள்...

தேவன் மகிழும் தியாக பலிகள் !

Webmaster by Webmaster
June 22, 2014
in படித்தவைகள்...
0
74
SHARES
1.2k
VIEWS

நாம் எல்லோருமே கனி கொடுக்க விரும்புகிறோம்! ஆனால்! அந்தோ, அநேகர் அதை மனுஷர் முன்பாகத் தந்திடவே விரும்புகின்றனர்! தியாகங்கள் செய்திடவும் விரும்புகிறோம். அதையும் மற்றவர்கள் காண்பதற்கு ஏதுவான முறையில் செய்கிறோம்!

You might also like

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

நாம் எவ்வித தியாகசேவை செய்ய வேண்டும் என்பதையும், அதை நிகழ்த்தும் இடத்தையும், காலத்தையும் தேவனே தெரிந்து மேன்மைக்கு எந்தத் தீனியும் கிடைக்காது! அவர் நம்மை மூடி மறைத்து, நம் அன்பையும் நம் உண்மையையும் அவர் ஒருவருக்கே வெளிப்படுத்தும் பொருட்டு, நாம் தனித்து நிற்கு வேண்டிய இடத்திற்கு நடத்திவிடுவார். நாம் சுயத்திற்கு மரிப்பதை, எவ்விதமா மரிக்கவேண்டும் என நாமாகவே தீர்மானிக்கத் தேவன் அனுமதி தருவதே இல்லை! ஒருக்காலும் இல்லை!! எவ்விதமான மரணத்தினால் நாம் தேவனை மகிமைப்படுத்த முடியும் என்பதை அவரே காட்டுவார் (யோவான் 21:19). ஓர் அடிமையாக இருக்கும் நான், இப்போது நான் என் அரையைக் கட்டிக்கொண்டு, தேவனை சேவித்து அவரை மகிமைப்படுத்தும்படி நான் விரும்புகிற இடத்துக்குச் செல்வேன் எனக்கூற அனுமதியே இல்லை. நிச்சயமாக இல்லை. அதற்கு மாறாக, அடிமையான நான் என் கைகளை நீட்டுவேன். வேறொருவன் என் அரையைக் கட்டி, எனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு என்னைக் கொண்டு போவான் (யோவான் 21:18). இயேசு தன் சகோதரர்களிடம் கூறியதைக் கேட்டீர்களா? என் வேளை இன்னும் வரவில்லை! உங்கள் வேளையோ, எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது! என்றார் (யோவான் 7:6). ஆம்! அவர்களோ தங்களுக்காகவே ஜீவித்தார்கள். ஆனால் இயேசுவோ நமக்காகவே வந்த தேவனின் அடிமை. சிலுவையில் மரணபரியந்தமும், அவர் மரணத்திற்கு கீழ்ப்படிந்தார். இங்கு நாம் காணும் மரணம் யாது? மகாக்கேடான துயர்மிகுந்த மரணம்! இதே வழியில் நாமும் சென்று பிதாவை மகிமைப்படுத்துவதற்கு ஆயத்தமா? இன்று அனேகர் நாங்கள் செய்த தியாகங்களைச் ஜம்பமாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால்! அவைகளில் ஒன்று கூட தேவனைப் பிரியப்படுத்த முடியவில்லையே! ஏன் தெரியுமா? தங்கள் தியாகங்கள் இன்னது எனவும், அதன் நேரத்தையும், இடத்தையும், அவரவர்கள் தாங்களாகவேத் தேர்ந்து தெரிந்து கொண்டதன் பரிதாபமேயாகும்!

பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இயேசுவுக்காய்த் தன்னைத் தியாகபலியாய் ஒப்புக்கொடுத்த உத்தம ஆசாரியன்! அவர் தேவனின் சுவிசேஷத்தை இந்த ராஜரீக ஆசாரித்துவ முறையிலேயே பிரகடனம் செய்தார். ஆம்! புறஜாதிகள் தூய பரிசுத்தாவியால் பரிசுத்தமாக்கப்பட (ளுயnஉவகைநைன) வேண்டும் என்பதே அவரது ஆசாரித்துவ தியாக பணியாக இருந்தது. இவ்வித தியாகபலிலே தேவனை மகிழச்செய்கிறது!
வெளிப்படையாக கிரியையைக் காட்டிலும், மறைந்து வாழ்வதற்கே ஒரு தேவனுடைய பிள்ளைக்கு அதிக கிருபை தேவைப்படுகிறது.

இம் மேன்மையை, ஏசாயா தன் தரிசனத்தில் கண்ட சேராபீகள் அருமையாகச் சித்தரிக்கிறார்கள் (ஏசா6:2). இப்பரலோக வாசிகளுக்கு ஆறு செட்டைகள் இருந்தன. ஆகிலும் தாங்கள் பறப்பதற்கு இவைகளில் இரண்டு செட்டைகளையே உபயோகித்தனர். அடுத்த நான்கு செட்டைகளையோத் தங்களை மூடி மறைத்துக் கொள்ள வைத்துக்கொண்டனர். பார்த்தீர்களா! தாங்கள் வெளிப்படையான கிரியை செய்வதற்குத் தேவையாய் இருந்த செட்டைகளைக் காட்டீலும் இருமடங்கு செட்டைகள் அவர்களை மறைத்துக்கொள்வதற்குத் தேவைப்படது! பரலோகவாசிகளுக்கே இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் என்றால், பெருமையின் விஷம் ஏறிய நமக்கு எவ்வளவு அதிகம் தேவை! மகா உயர்ந்த ஸ்தானத்திற்கு வந்துவிடும்படி நாம் பலமுறை நம் எல்லா செட்டைகளாலும் அடித்துப் பறந்து மிதக்கிறோம். ஆனால், அய்யகோ! ராஜா இந்த நம் அழகில் பிரியப்படவில்லையே! ஆம் மறைந்து ஜீவிப்பது பரலோகத்திற்குரிய ஒரு சட்டமாகும். நாம் வேதத்தில் காணும் கேருபீன்களும் தங்கள் கிரியைகளை செட்டைகளுக்குள் மறைத்தே வைத்திருந்தனர் (எசே 10:8).

இதுவே தேவனுடைய சபைக்கும் பொருந்துமல்லாவா? உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்றும் ஜெபிக்கியோமே! நம்மை நாமே மூடி மறைத்துக் கொள்வதற்கு தேவன் நமக்கு ஏதாகிலும் வாஞ்சை கொண்டால் போதும்…… நம்மை மறைத்துக் கொள்வதற்கு ஏராளமாக சந்தர்ப்பத்தை நிச்சயமாய் அருளுவார். ஆனால்! நாமோ நம்மை ஒரு பொருட்டாக வைத்துக்கொள்ளவே இச்சிக்கிறோம். பிரகாசிக்கும் நம் முகத்தை, சாடி ஓடும் நம் சுறுசுறுப்பான பாதங்களையும் மூடி மறைப்பதற்குரிய விரும்பத்திற்குப் பதிலாக மற்றவர்களும் அதைக் காணவேண்டும் என்றே பேராவல் கொள்கிறோம். ஆ….. இது பேரிழப்பன்றோ!

இவ்விதமாய் உங்களை மறைத்துக்கொள்ளும்போது, உங்கள் ஜீவியத்தின் விலை குறைந்து விடுமே என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். பொறுங்கள்! தங்களை மூடி மறைத்துக்கnhண்ட சேராபீன்கள் தேவனைத் துதித்த போது நடந்த நிகழ்ச்சியை இப்போது உற்று நோக்குங்கள்!! (ஏசா 6:3). ஆலயமே கிடுகிடுத்து நடுங்கியது! தீர்க்கதரிசியும் அலறிப் புடைத்து, ஐயோ! அதமானே;, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் (வச5) என்றான்! ஆம், இப்பரலோக வாசிகளின் துதியானது, வேறெதுக்கெல்லாமோ ஐயோ சொன்ன தீர்க்கதரிசியைத் தாழ்மைப்படுத்தி இப்போது தனக்கு ஐயோ எனக்கதறும்படி செய்து விட்டதே! கண்டீர்களா விந்தையை! இந்த மறைந்திருக்கும் நிலையில் மாத்திரமே நீங்கள் அதிகக் கனியையும் வலிமையான சேவையையும் நல்கிட முடியும்!!

சிலுவை இல்லாத இயேசுவா என்ற நூலிலிருந்து…

Webmaster

Webmaster

Recommended For You

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...

Read moreDetails

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9 4. சோதோம் மனிதருக்குக் குருட்டாட்டம் உண்டானது. ஆதி.19:11 5. சோதோம் கொமோரா பட்டணங்கள் வான...

Read moreDetails

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான். அப்.7:52 6. யாக்கோபு. யாக்.5:6-8 7. யோவான். 1.யோ.2:1,29

Read moreDetails

சூலமித்தியாளை ஆத்தும நேசர் அழைக்கிறார்! (உன்னதப்பாட்டு)

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. என் பிரியமே! 1:9,15, 2:2,7,10, 4:7, 5:2, 6:4,10, 7:6 2. என் ரூபவதியே! 1:8,15, 2:10, 4:1,7, 5:9, 6:1, 7:6 3. என் உத்தமியே! 5:2, 6:9 4. என் புறாவே! 1:15, 2:14,...

Read moreDetails

நமது அழைப்பு

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2 5. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அழைப்பு. 1.தீமோ.6:12 6. இயேசு கிறிஸ்துவுடனே...

Read moreDetails
Next Post

Isaac and Ishmael

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?