Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

ஏன் எனக்கு அமைதியில்லை

Webmaster by Webmaster
February 23, 2025
in துண்டுப் பிரதிகள்
0
ஏன் எனக்கு அமைதியில்லை
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு, சரீர் வேதனை என பல பிரச்சினைகளை சரீரத்தில் உணரமுடியும். இவைகள் உண்மையான நோய்கள் அல்ல. உள்ளே மறைந்திருக்கும் கான்சர் நோயின் வெளிப்படையான அறிகுறிகளே இவைகள். எனவே மேற்கண்ட நோய்களுக்கு நாம் மருத்துவம் செய்தால் அதனால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். மறைந்திருக்கும் கான்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சை உரிய நேரத்தில் செய்யப்பட்டால்தான் நல்ல பலன்கள் கிடைக்கும்.

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

பலருக்கு பயம், அமைதியின்மை, பதட்டம், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவைகளை அவர்கள் தங்களின் பிரச்சினைகளாக எண்ணிக்கொண்டு அவைகளைச் சரி செய்ய பலவிதமானக் காரியங்களைச் செய்கின்றனர். சிலர் கோயில்களுக்கு செல்கின்றனர். சிலர் பக்தி ரீதியாக சில காரியங்களை செய்கின்றனர். சிலர் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்றனர். சிலர் புனிதத்தலங்கள் போய்வருகின்றனர். சிலர் மனதை இலகுவாக்கும் சில ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் அவர்களுக்கு நிரந்தரமானத் தீர்வுகள் அவைகளால் கிடைப்பதில்லை. எல்லாம் சற்று நேரம் மட்டுமே செயல்படுகின்றன.

காரணம் என்ன? மேற்கண்ட மனப்பிரச்சினைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோயின் வெளிப்புறமான அறிகுறிகளே அந்த நோயின் பெயர் என்ன? அதன் பெயர்தான் பாவம். பாவம் என்றால் என்ன? தன்னைப் படைத்த தேவனோடு தனிப்பட்ட உறவுடன் வாழாமையின் பெயர்தான் பாவம். மனிதன் கடவுளின் உறவில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். மனிதன் கடவுளின் உறவினால் மட்டுமே முழுமையான வாழ்வினை அடைகின்ற இயற்கையுடன் படைக்கப்பட்டவன். கடவுளை நாம் நம்பலாம். கடவுளை நாம் வணங்கலாம். கடவுளை நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்யலாம். ஆயினும் கடவுளின் உறவுடன் வாழ்வது என்பது வித்தியாசமான ஒரு அனுபவம். கடவுளின் உறவினை மனிதன் தனக்குள் அனுபவிக்கும் போதுதான் அவனைவிட்டு தனிமை உணர்வு போகின்றது. தனிமை உணர்வு போகின்ற போதுதான் பயம், சோர்வு, பீதி, கவலை ஆகியவைகளும் போகின்றது.

கடவுளின் உறவு இல்லாத உள்ளான ஒரு நிலைமை தான் பாவம். அந்த பாவத்தின் அறிகுறிகள்தான் அகலாத பயங்களும், நீங்காத நிம்மதியின்மைகளும், மறையாத வேதனைகளும், விலகாத மனச்சோர்வுகளும், உள்ளான இருதயத்தில் கடவுளின் உறவினை அடைந்து உணரும்வரை மனரீதியான பலவிதத் துயர்தரும் விஷயங்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.

கடவுளின் உறவினைப் பெறுவது எப்படி? கடவுளின் உறவை மனிதன் பெறுவதற்காக பாவநிவாரணம் செய்யப்பட வேண்டியத் தேவை உண்டு. அந்தப் பாவநிவாரணத்தை செய்திடவே தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமியில் மானிடனாக வந்து பாவநிவாரணப் பலியாக தம்மையேக் கொடுத்தார். சிலுவையில் இயேசு கிறிஸ்து பாவநிவாரண பலியாக அடிக்கப்பட்டார். அதன் விளைவாக மனிதன் தேவ உறவுடன் வாழ்வதற்கான வாசல் திறக்கப்பட்டது. இந்த இரட்சகராகிய இயேசுவை
நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறை உறவுடன் வாழ விரும்பும்போது பாவம் ஒழிகிறது. அதாவது தேவ உறவற்ற நிலை போய், தேவ உறவுடன் வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டுகிறது. அதன் விளைவாக நாம் உண்மையான இதய அமைதி, நம்பிக்கை. சந்தோஷம், மனத்தூய்மை ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழிதிறக்கின்றது. பலவிதமான வாழ்க்கை சுமைகளினால் வருத்தப்பட்ட மக்களைப் பார்த்து இயேசு ‘என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருகிறேன்’ என்றார். அதாவது அவரோடு ஒரு நெருங்கிய உறவுடன் வாழவரும்போது, அவரால் நமக்கு உண்மையான அமைதி கிடைக்கிறது (மத்தேயு 11:28).

ஆண்டவராகிய இயேசு இன்றும் உங்களை அன்புடன் அழைக்கின்றார். தேவ உறவின்மை என்ற பாவ வாழ்வை விட்டு விலகி, தேவ உறவுடன் வாழ்தலாகிய தூய்மையான வாழ்விற்கு வரும்போது அங்கே பயமும், கவலையும், சோர்வும் நீங்கி உண்மையான தேவ அமைதியை இருதயத்தில் உணரலாம்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவர் இயேசுவே.
தேவ உறவில்லாத என் பாவ
வாழ்வை மன்னியும். எனக்குள் நீர்
வந்து உம்முடைய உறவை
அனுபவிக்கச் செய்யும்,
கவலைகள், பயங்கள், சோர்வுகள்,
சஞ்சலங்கள், பதட்டங்கள்
யாவற்றையும் நீக்கி என்னை
அமைதியுடன் வாழச் செய்யும். உமக்கு
பிரியமாக வாழ்வதற்கு உதவி செய்யும். இயேசுவின்
நாமத்தில் ஆமென்.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

மன்னனின் மதியீனம்

June 10, 2025
மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ்...

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails
Next Post
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் - மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?