பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
நீதியுள்ள பாதையில் எம்மை
நடத்தும் தேவனே
உம்மை நினைவு கூர்ந்து
துதிக்கும் எம்மைக் காரும் இயேசுவே
வாழ்வு தந்திடும் வார்த்தை தன்னை
வாஞ்சிக்கிறோமே – தினம்
தேற்றும் உமது திருவசனமே
காக்கும் இயேசுவே !