மனக்கவலை தீரவொரு மார்க்கம் உண்டோ?
என் மாசில்லா ஜோதியே
உம்மைக் கேட்கின்றேன் கணக்கில்லா
துயரத்தால் எனை மீட்கவே என்
கர்த்தாவே எனைத் தேடி வந்துவிடும்
குணப்படுவாய் என்றுமது குரல்கேட்டும்
நாளைத் தான் தினந்தோறும் எதிர்பார்க்கிறேன்
மறுவாழ்வு வாழ்ந்திடவே மனம் மாறி அழைக்கின்றேனே
அப்பா மனம்மாறி அழைக்கின்றேனே
எனக்கொரு வழிகாட்டும் இறைவா நீர்
என்று உம்மை இதயத்தால் இறைஞ்சுகிறேன்
இனித் துயரம் தாங்காது என்னிதயம் இறைவா நீர்
எனை வந்து காத்துக்கொள்ளும்
இயேசுவே எனை வந்து காத்துக்கொள்ளும்
வேதனை துன்பங்களை தேவனே உம்மைத்தவிர
யாரிடம் போய் உரைப்பது… இயேசுவே
நாதனே பேசமய்யா! மனமிரங்கியே எந்தன்
பிழைதனைப் பொறுத்துக்கொள்ளும்
ஆயனே! ஆண்டவா! அழுகிறேன் புலம்பினேன்
அணைத்தென்னை முத்தமிடும் தேவனே அணைத்தென்னை முத்தமிடும்.