ஒரு பாரம்பரிய சரித்திரக்கதை
(சங்.118:22, ரோ.9:32-33, ஏசா.28:16, 8:14, 1.பேது.2:4-8)
சலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு சேராமல் கொஞ்சம் நீட்டாகவும் உருண்டு திரண்டதாகவும் இருந்தது. அந்தக் கல்லை அவர்கள் தேவாலயம் கட்ட எடுக்காமல் தூர வீசி ஏறிந்தார்கள். அந்தக் கல் ஆலயம் கட்டிக்கொண்டிருந்த வேலைக்காரருக்கும் சிற்பாச்சாரிகளுக்கும், வெளியே போகும்போதும் வரும்போதும் அது அவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லாய் கிடந்தது. ஆலயம் கட்டி முடிக்கிறபோது அந்தக் கல்லை எடுத்து ஆலயத்தின் மூலைக்குத் தலைக்கல்லாக வைத்தார்கள்.
தேவசபையாகிய ஆலயத்தின் மூலைக்கல்லும் மூலைக்குத் தலைக்கல்லும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்துவாகிய கல்லை யூதர்கள் (வீடு கட்டுகிறவர்கள்) வேண்டாம் என தள்ளிப்போட்டார்கள். யூதர்களுக்கு கிறிஸ்து இடறலாயிருந்தார். கடைசியாக அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய இரத்தம் முழுவதும் சிந்தப்பட்டது. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் சாம்பாதிக்கப்பட்ட அவருடைய சபைக்கு அவர் மூலைக்கல்லும், மூலைக்குத் தலைக்கல்லுமானார். அவரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லை (மத்.11:6, 13:57, 15:12, 1.கொரி.1:23, அப்.10:43, 4:12, 6:31, யோ.1:12)