படைப்பைக் குறித்து வேதப்புத்தகத்தில், ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதி.1:1ல் வாசிக்கிறோம். மனிதன் படைப்புக்கு முன் உண்டாக்கப்பட்ட முக்கியமான தேவதூதர்களில் ஒருவனாய் இருந்த லூசிபரைக் குறித்து ஏசா.14:12-17, எசேக்.28:13-18 வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். அபிசேஷகம் பண்ணப்பட்ட கேரூப். ஞானமும், அழகும் நிறைந்தவன். அவன் உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்று தன் உள்ளத்தில் மேட்டிமை அடைந்தபோது, கீழே தள்ளப்பட்டான். அது முதல் அவன் சாத்தானாக அல்லது எதிராளியாக மாறினான். சாத்தானும் அவன் தூதர்களும் தேவனுக்கும், தேவத் திட்டங்களுக்கும் மாறாகச் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேவன் 6 நாட்களில் உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்து 7ம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று காணப்படுகிறது. (ஆதி.1:3-24, 2:2-3)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more