- நீ செய்தது பெரிய தவறு இல்லைதான் ஆனால் சிறிய தவறுக்கு பின்னர் வருவதுதான் பெரிய தவறு.
- நீ சொன்னது பொய் அல்ல என்பது உண்மைதான் ஆனால் அந்த உண்மையை சொன்னதற்கு நீ சொன்ன காரணம் பொய்யானது.
- நீ மற்றவரை விழவைக்கவில்லை என்பது உண்மையே ஆனால் மற்றவரை விழாமல் நிற்க வைக்கும் வாய்ப்பை நீ பயன்படுத்தவில்லை.
- நீ செய்த தவற்றை தவறு என்று ஒத்துக்கொண்டாய் ஆனால் அதற்காக சற்றும் நீ வருந்தாதது பெரிய தவறு.
- பிறருடைய தவறுகளை நீ நன்றாகவே சுட்டிக்காட்டுகிறாய் ஆனால் உன் தவறு மட்டும் உன்னை உறுத்தவில்லையே.
- நீ செய்த நல்லவைகளை பிறர் நினைக்கவில்லை என்று வருந்தாதே. நீ செய்த தீமைகளைக்கூட பிறர் நினைக்கவில்லையே.
- நீ சொன்ன உண்மையை பிறர் நம்பாமல் போனதற்கு நீ பலமுறை சொன்ன பொய்களும் காரணமாயிருக்கும். நீ காட்டின நல்வழியில் பிறர் நடக்கவில்லை என வருந்தாதே அந்த வழியில் நீ நடந்தால் அதை எண்ணி மகிழ்ச்சியாயிரு.
- மற்றவர்கள் உன்னை மதிக்கவில்லை என்பதுதானே உன் வருத்தம் பின்னர் ஏன் நீயும் அதே தவறைச் செய்கின்றாய்.
- உன்னுடைய தவறை நீ நியாயப்படுத்தும்போதெல்லாம் மீண்டும் அந்த தவறை செய்ய ஆர்வமாயிருக்கிறாய் என்று பொருள்.
- நீ செய்த தவறை தவறு என்று உணர மறுக்கின்றாய் ஏனென்றால் நீ ஒரு தவறான மனிதன்.
(ஜீவநீரோடை புத்தகத்திலிருந்து…)