பாகாலின் அழிவும், மாம்சத்திற்குரிய வைராக்கியமும்
2025 மார்ச் 31 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:18-28 “அப்படியே யெகூ சகல ஜனங்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலுக்குக் கொஞ்சமாய ஊழியஞ்செய்தான்; யெகூ அவனுக்கு மிகுதியாய் ஊழியஞ்செய்வான்” (வச. 18). இஸ்ரவேல் தேசத்திலிருந்து பாகால் வழிபாட்டை முற்றிலுமாக வேரறுக்க யெகூ எடுத்த ஒரு தந்திரமான நடவடிக்கையை இந்தப் பகுதியில் காண்கிறோம். யெகூ தன்னை ஒரு தீவிரமான பாகால் பக்தனாகக் காட்டிக்கொண்டு, இஸ்ரவேலிலுள்ள சகல பாகாலின் தீர்க்கதரிசிகளையும், ஆசாரியர்களையும் ஒரு மாபெரும் பலிக்காக அழைத்தான். அவனுடைய…