April

அழிக்கப்பட முடியாத தேவவாக்குத்தத்தம்

2025 ஏப்ரல் 2 வேதபகுதி: 2 ராஜாக்கள் 11:1-3 “ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபாள் … அகசியாவின் குமாரனாகிய யோவாசைத் திருட்டாயாய் எடுத்து… அவன் கொல்லப்படாதபடிக்கு, அவனையும் அவன் தாதியையும் பள்ளியறையிலே ஒளித்துவைத்தார்கள்” (வச. 1, 2). யூதாவின் சரித்திரத்தில் மிகவும் இருண்ட காலகட்டம் இது. அத்தாலியாள் என்ற கொடிய ராணி, தன் அதிகார வெறிக்காகத் தன் சொந்தப் பேரப்பிள்ளைகளையே ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கிறாள். இது வெறுமனே ஒரு ராஜ்யத்தைக் கைப்பற்றும் அரசியல் சதி மட்டுமல்ல; இதன் பின்னணியில்…

April

தேய்ந்துபோன ஆசீர்வாதங்கள்

2025 ஏப்ரல் 2 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:32-36 “அந்நாட்களிலே கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து…” (வச. 32). யெகூவின் அரைகுறை கீழ்ப்படிதல் கசப்பான பல விளைவுகளை உண்டாக்கியது. தேசம் செழிப்படைவதற்குப் பதிலாக, கர்த்தர் இஸ்ரவேலைக் ‘குறைந்துபோகப்பண்ணினார். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, பாலும் தேனும் ஓடும் தேசமாக விரிவடைய வேண்டிய ஒரு தேசம், தன் பாவத்தின் காரணமாகத் தன் எல்லைகளை இழக்கத் தொடங்கியது. தேவன் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் எல்லைகளை, அவர்களுடைய…

April

அரைகுறை கீழ்ப்படிதலும் பிளவுபட்ட இருதயமும்

2025 ஏப்ரல் 1 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:29-31 “ஆகிலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்க எச்சரிக்கையாயிருக்கவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின எரொபெயாமுடைய பாவங்களை விட்டு அவன் விலகவுமில்லை” (வச. 31). யெகூவின் வாழ்க்கை, ஆவிக்குரிய ஜீவியத்தில் அரைகுறையான கீழ்ப்படிதல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். அவன் ஆகாபின் வம்சத்தை அழித்தான்; பாகாலின் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து முற்றிலுமாக வேரறுத்தான். அவனுடைய இந்தச் செயல்களைக் கர்த்தர் மெச்சி, அவனுக்குப் பலனையும்…