ஆசீர்வாதத்தின் உச்சமும் பெருமையின் வீழ்ச்சியும்
2025 ஏப்ரல் 12 வேதபகுதி: 2 ராஜாக்கள் 15:1-12 “கர்த்தர் ராஜாவை வாதித்ததினால், அவன் மரணமடையும் நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனையை விசாரித்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்து வந்தான்” (5). அசரியா தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று வேதம் சாட்சியளிக்கிறது. அவனுடைய ஆட்சியின் தொடக்கக் காலம் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. அவன் பலப்படும்வரை கர்த்தர் அவனுக்கு ஆச்சரியமான விதத்தில் உதவிசெய்தார்.…