July

ஆரோனின் துளிர்த்த கோல்

(வேதபகுதி: எண்ணாகமம் 14:1-13) “அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்” (வச. 5). “நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்” (வச. 5) என்பதே ஆசாரியத்துவத்தைக் குறித்து எழுந்த சர்ச்சைக்கு தேவன் வைத்த முற்றுப்புள்ளி. இந்தப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்குள் எழுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தேவனுடைய ஆலோசனையே நித்தியத் தீர்வாக இருக்க வேண்டும். மனிதர்களுக்குள் அல்லது விசுவாசிகளுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு மனிதத் தீர்வு…