நாள் 31: பாவிகளின் சிநேகிதன் மத்தேயு 9:9-17
அழைப்பு மற்றும் பதில் (மத்.9:9)
மாற்கு 2:14 ன் படி லேவி என்பது மத்தேயுவைக் குறிப்பது மிகவும் சாத்தியம். அவரது பெயரில் அவருடைய மூதாதையர்கள் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிகிறது, ஆனால் அவரோ இந்த மரபுரிமையில் இருந்து வெகு தொலைவில் இருந்தார். ஒரு வெளிநாட்டு சக்திக்கு வரி வசூலிப்பவர் என்ற வகையில் அவர் மக்களால் வெறுக்கப்பட்டு, எதிரியாகக் கருதப்பட்டார். ரோமானியர்கள்; ஒரு சீரான விகிதத்தில் வரிகளை வசூலிக்க உரிமையை வழங்கினர், மற்றும் வரி வசூலிப்பவர் அதன் ஒரு பகுதியைக் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் எல்லோரும் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க முயன்றனர்.
இந்த துரோகியையும், மிரட்டலாளியையும் இயேசு மட்டும் தனது ராஜ்யத்திற்கான விலைமதிப்பற்ற முத்து என்று கண்டார். இந்த வரி வசூலிப்பாளரை சுவிசேஷகராக எவரும் அங்கீகரிக்கவில்லை. ” எனக்குப் பின்சென்றுவா!” என்ற வார்த்தையை மத்தேயு கேட்டு, தயக்கமின்றி பதிலளித்தார். ” அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்” என்று ஒன்பதாவது வசனம் கூறுகிறது. அவன் அநேகத்தை பின்னால் விட்டான், ஆனால் அதிசிறந்ததை வென்றான். தனது எழுத்து திறமையை அவருடைய ஊழியத்திற்கு அர்ப்பணித்தான். நம்முடைய அனுபவத்தையும் பயிற்சியையும் நாம் அவரைப் பின்பற்றுவதற்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் அதற்கு மதிப்பளிக்கின்றார்.
விருந்தும் உபவாசமும் (மத்.9:10-15)
இந்த வசனங்கள் ஒரு மனித நிகழ்வைக் கூறுகின்றன. மத்தேயு தனது நன்றியைக் காட்டும்படி ஒரு விருந்தை ஆயத்தம்செய்து, தன்னைப் போலவே வெறுக்கப்பட்ட அவரது சிநேகிதர்கள் பலரை அழைத்தார். இயேசு ஒரு துறவி அல்ல, ஒவ்வொரு விருந்திலும் அவரோடு இருப்பது மகிழ்ச்சியை அதிகரித்தது. சீஷர்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தார்கள், மற்றும் அவர்களுடன் சேர்ந்த அனைவரும் இந்த மகிழ்ச்சியை அனுபவித்தார்கள்.
இயேசு வெறுக்கப்பட்டவர்களிடமும், தள்ளப்பட்டவர்களிடமும் பேசுவதாக பரிசேயர் கண்டு விசனமடைந்தார்கள், ஏனெனில் இவர்கள் பிரமாணத்திற்குத் தூரமானவர்கள். அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்ட பின்பு, “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று கூறி அவரது செயல்களை நியாயப்படுத்தினார் (மத்.9:13). ஒரு விருந்தில் பாவியின் பங்கேற்பில் எந்தவித பங்கமும் இல்லை, அதாவது ஒரு மருத்துவரிடம் ஒரு நோயாளி இருப்பதைப் போல (மத்.9:12). இயேசு எங்கு பெரிய தேவைகள் காணப்பட்டதோ, அங்கே எப்போதும் இருந்தார். (ஓசி. 6:6).
யோவானின் சீஷர்கள் மற்றொரு வாதத்தை முன்வைத்தனர்: ” உம்முடைய சீஷர்கள்; உபவாசியாமலிருக்கிறது என்ன?” என்று கேட்டார்கள். கர்த்தர் அவர்களை நோக்கி, ஒரு திருமண விருந்தில் உபவாசம் இருப்பது பொருத்தமற்ற செயல் என்பதையும் (மத்.9:15), மேசியா அவர்களிடையே இருக்கின்றார் என்பதையும் எடுத்துக்காட்டினார். சில சூழ்நிலைகள் நிலைமையை மாற்றுகின்றன, இயேசு சொன்னதுபோலவே சீஷர்கள் பின்னர் உபவாசம் இருந்தனர்.
கிழிதலும் பீறலும் (மத்.9:16-17)
சுவிசேஷத்தின் அடக்கமுடியாத மகிழ்ச்சியைப் பழைய பிரமாணங்களினால் பாதிக்கமுடியாதது என்பதை இயேசு தமது பதிலில் தெளிவுபடுத்தினார். யூத மதப் பிரமாணங்களை கிறிஸ்தவத்துடன் இணைக்கமுடியாது. பழைய துணிகளை சரிசெய்ய நீங்கள் புதிய துணிகளைப் பயன்படுத்தினால், ஒரு விரிசல் உருவாவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
யூத சட்டமான பழைய தோல் துருத்திகள் தேவனுடைய இராஜ்யத்தின் புதிய ரசத்தைச் சேகரித்துவைக்க முடியவில்லை. அவை பீறிக் கிழிக்கும். இயேசு கொண்டு வந்த புதிய உபதேசம் யூத மதத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை உடைந்தெறிந்தன. எனவே அவர் நற்செய்தியின் வெற்றியைத் தீர்க்கதரிசனமாக உரைத்து, தேவனின் கிருபையை பாவிகளுக்கு வெளிப்படுத்தினார்.
சுய பரிசோதனைக்கு:
தேவனுடைய இராஜ்யத்தின் புதிய திராட்சை ரசம் நம்முடைய நாட்களில் எத்தகைய பங்கை வகிக்கிறது?