நாள் 30: இயேசு பாவத்தை மன்னிக்கிறார் மத்தேயு 9:1-8
அவனது நான்கு நண்பர்கள் திமிர்;வாதத்தை குணப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர். அவர்கள் நோய்வாய்ப்பட்டவனின் மீது வைத்த அன்பினால், மிகவும் புதுமையானவண்ணமாக இயேசு இருந்த வீட்டின் கூரையைப் பிரித்து இயேசுவைச் சந்திப்பதை சாத்தியமாக்கினார்கள்;. (மாற்.2:1-4 ஐ பார்க்கவும்). இந்த நிகழ்வு நாம் மக்களை இயேசுவிடம் அழைத்து வரும்போது இதேவண்ணமாக இருதயபூர்வமாகவும் உறுதியுடனும் எமது பணியைச் செய்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறதா?
விசுவாசம் பலனளித்தது (மத் 9:2,7)
நோய்வாய்ப்பட்ட தங்கள் நண்பனைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அந்த நான்கு பேரும் இயேசுவிடம் வந்தார்கள். அற்புதம் நடந்தது, இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு”. அவர்கள் இயேசுவோடு ஒரு சந்திப்பைச் செய்ய இயலாத தடைகளைக் கடந்து வெளிப்படையாக தங்கள் விசுவாசத்தைச் சாட்சியிட்டனர். இயேசுவை மேசியாவாகக் அடையாளப்படுத்த தூண்டினர். ஆனால் இந்த அற்புதம் இந்த நான்கு மனிதர்களில் மட்டும் தங்கியிருந்ததா? திமிர்வாதக்காரனின் விருப்பத்திலிருந்து நாம் இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் அவனுக்கு நம்பிக்கை இருப்பதாக முடிவு செய்யலாம். இந்த அற்புதம் தான் அவர்களின் பொதுவான விசுவாசத்திற்குப் பதில்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டது (மத்.9:2,5)
யூதர்கள் நம்பியபடி, நோய் என்பது பாவத்தின் நேரடி விளைவு அல்ல (யோ.9:3), ஆனாலும் அனைத்து நோய்களின் பின்னால் பாவம் உள்ளது. தேவன் முதலில் மனிதர்களுக்காக இதை திட்டமிடவில்லை. தேவனின் நோக்கம் ஆரோக்கியமான சரீரம், சில சமயங்களில் அவர் ஒரு நோக்கத்திற்காக எப்போதும் நோயை அனுமதிக்கமாட்டார்.
அந்த மனிதனிடம் இயேசு சொன்ன வார்த்தைகள்: “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது ” உடல் ஆரோக்கியத்தைவிட அவனுக்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நோய் அநேகமாகப் பாவத்தின் விளைவாக இருந்திருக்கலாம். மனிதனின் உண்மையான தேவை அவனுக்குள் இருக்கிறது. இயேசு அந்த வியாதியஸ்தனின் பாவத்தை மன்னித்தார், ஏனெனில் அவர்களுக்காக சிலுவையில் விரைவில் பரிகாரம் செய்வதை அவர் அறிந்திருந்தார். இயேசுவுக்கு எதிராகப் பாவம் செய்தபோதும், அவரே பாவத்தின் விலையைச் செலுத்தினார்.
விமர்சனம் எழுகிறது (மத்.9:3)
அங்கிருந்த வேதபாரகர்களுக்கு இந்த நோய்வாய்ப்பட்ட மனிதனின் துன்பத்திலோ, குணப்படுத்தலிலோ ஆர்வம் இருக்கவில்லை. இந்த கஷ்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு எந்த முக்கியத்துவமாகத் தெரியவில்லை. மாறாக அவர்கள் “இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன?” என்று விமர்சித்தார்கள். குணப்படுத்தலின் வகை அவர்களுக்கு இடறலாயிருந்தது. அதிகாரத்தைப் பிரயோகித்தல், பாவங்களை மன்னித்தல் தேவதூஷணம் போன்றது. குணப்படுத்தியவர் தேவனாக இருந்திருக்காவிட்டால், அவர்களுடைய தீர்ப்புச் சரியாகக் காணப்பட்டிருக்கும். ஆனால் அவர் தேவ குமாரனாக இருந்தபடியால், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது ” என்றும் “, அவ்வண்ணமே ” நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றும் அவர் எளிதாகக் கூற முடிந்தது. இயேசுவின் அதிகாரத்திற்கு வரம்புகள் இல்லை. அது சரீரம் மற்றும் ஆன்மீகப் பகுதிகளில் கிரியை செய்கிறது.
குணப்படுத்தும் இந்த அற்புதத்தில் தேவனுடைய ராஜ்யத்தின் இராஜா தனது அதிகாரத்தை விரிவான ஆதாரமாக முன்வைத்தார். அவருடைய தெய்வீக அதிகாரம் மக்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்;. ஆனால் வேதபாரகர்கள் விமர்சன வார்த்தைகளை மட்டுமே தெரிந்தார்கள். (மத்.9:3).
சுய பரிசோதனைக்கு:
என்னைச் சுற்றியுள்ளவர்களை அவர்கள் தேவையில் கிறிஸ்துவினிடம் வழிநடத்த முடியும் என நான் அறிந்திருக்கிறேனா, அதனால் அவர் வல்லமையை அவர்கள் மீது பிரயோகிக்கமுடியுமா?