நாள் 29: பிசாசுகளின்மேல் அதிகாரமுள்ள தேவன் மத்.8:28-34
மத்தேயு இந்த அற்புதம் கெர்கெசேனர் நாட்டில் நடைபெறுவதாக எழுதும்பொழுது, மாற்கு கதரேனருடை நாட்டில் நடைபெறுவதாகக் கூறுகின்றார். இயேசு இந்த அற்புதத்தை எங்கு செய்தார் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. கதரேனருடைய நாடு கலிலேயாக் கடலுக்கு தென்கிழக்கே சுமார் ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ள பகுதி. அது ஒரு பின்தங்கிய, வளமற்ற மிகக் குறைந்த மக்கள் தொகை மட்டுமே உள்ள நாடு. இயேசு கடலின் மறுபக்கத்தை அடைந்தபோது, பிசாசு பிடித்திருந்த இருவரை சந்தித்தார், அவர்களுடைய இருப்பிடம் பிசாசுகள் தங்கும் வழக்கமான கல்லறைகளில் இருந்தது. அவருடன் பேசியவர்கள் கொடியராயிருந்தனர்.
பிசாசுகளின் உண்மை நிலை (மத்.8:28)
பல நவீன இறையியலாளர்கள் பிசாசுகள் இருப்பதையும், அதன் ஆளுமையின் உண்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். அவர்களில் ஒருவன் இப்படியாக எழுதுகிறான்: “நவீன மனிதனுக்குப் பிசாசகளின் உலகம் ஒரு கட்டுக்கதையாகவே இருக்கிறது”. பரிசுத்த ஆவியானவர் மூலமாக வேதத்தின் உத்வேகத்தை நம்புகிற ஒரு கிறிஸ்தவர் இந்த அணுகுமுறை புறஜாதியர் நாடுகளில் தனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருப்பதால், இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். கடந்த காலத்திலும் இன்றும் சிலர் பிசாசகளின் கிரியைகளை சற்றுப் பெரிதுபடுத்தி, அதன் செயற்பாட்டைப் பெரிதாக கருதினாலும், புதிய ஏற்பாடு பிசாசுகளின் ஆவேசத்திற்கும் வலிப்பு போன்ற பிற நோய்களுக்கும் இடையே மிகவும் வித்தியாசமுள்ளது என்பதைக் கூறுகிறது. பிசாசுகளின் கிரியைகளை மறுதலிக்கும்பட்சத்தில் இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கும் நேர்மைக்கும் சவால் செய்யப்படுகின்றன.
இயேசுவின் அதிகாரம் (மத்.8.29-32)
இந்த மனிதர்களின் தேவனைத் தூஷிக்கும் கூச்சல்களில் அவர்கள் பிசாசின் பிடியில் சிக்கியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. பிசாசுகள் அதிக வேதனை இருப்பதை உணர்ந்தன (மத்.8:29) மற்றும் மத்தேயு 8.27 இல் சீஷர்களுக்கு ஒரு உறுதியான பதிலாக அமைந்தது. அமானுஷ்ய சக்திகளுக்கு அமானுஷ்ய நுண்ணறிவு உள்ளது, ஆனால் அவை எல்லாம் அறிந்தவை அல்ல. மத்தேயு 8:29 ல் உள்ள வாக்கியம் “காலம் வருமுன்னே” என்ற வார்த்தை, திடீரென ஒரு தீர்ப்பு வருகிறது என்று பயந்தன. பிசாசுகள் எப்போதுமே அழிவையே உண்டாக்குகின்றன, ஆத்துமாக்கள் இல்லையென்றால் பன்றிகள். தீமை எப்போதும் நிர்மூலமாக்குவதில் அக்கறை கொண்டுள்ளது. பிசாசின் இடிபாடுகளிலிருந்தும் பரிசுத்த அவியானவர் உருவேற்படுத்துகின்றவர். வெளியேற்றப்பட்ட, துரத்தப்பட்ட பிசாசுகள் தங்கள் தீய நோக்கங்களுக்காகவும் திட்டங்களுக்காகவும் வேறோரு உருவகத்தைத் தேடுகின்றன. கிறிஸ்து அந்த இரு மனிதர்களிடமிருந்து விரட்டுவார் என்பதை அறிந்த அவைகள், பன்றிகளில் உடலில் உருவேற்படுத்துமாறு வேண்டின. (மத்.12:43-44 பார்க்கவும்). இயேசுவின் வல்லமைவாய்ந்த வார்த்தை: “வெளியே போ!” திடுக்கிட்ட பன்றிகள் கடலில் மூழ்கி மாண்டுபோயின. சிலர் இயேசு பன்றிகளை அழிக்க அனுமதித்ததாக வாதிடலாம், ஆனால் அதே மக்களே காலை உணவுக்கு வுஸ்ட் சாண்ட்விச்கள் சாப்பிடுவதைக் கவனியுங்கள். மனித ஆத்துமாக்களின் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு ஒரு சில பன்றிகளின் இழப்பைவிட முக்கியமானது. இயேசு தனது வல்லமையினால் பிசாசினால்; சிக்கி சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட இருவரையும் சாத்தானின் பிடியிலிருந்து விடுவித்தார். ஆனால் அவர் யூத மக்களின் நலனுக்காகவும் செயற்பட்டு, பிரமாணத்தினால் தடைசெய்யப்பட்டிருந்த பன்றிகளிடமிருந்து விடுவித்தார். இயேசுவின் புலப்பட்ட அதிகாரத்தின் தாக்கம் இருவரையும் நம்பவைத்து, பிசாசுகள் துரத்தப்பட்டதைக் காண்பித்தன.
கதரேனருடைய பரிதாபநிலை (மத்.8:33-34)
பாரம்பரிய உரிமைகளின் தீங்கு விளைவிக்கும் கதரேனருடைய செல்வாக்கு இயேசு தங்கள் பிரதேசத்திலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அவர்கள் தேவனுடைய குமாரனின் குணப்படுத்தலை விரும்பாமல் தங்கள் பன்றிகளை விரும்பினர் (மத்.8.34). ஆனால் பிசாசின் பிடியிலிருந்து குணமடைந்த இருவரும் “பத்து நகரங்கள்” (மாற்.5:20) பகுதியில் மிஷனரிகளாக மாறினர்.
சுய பரிசோதனைக்கு:
பிசாசுக்கு ஒரு இடத்தை கொடுக்கும் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அழிக்க இயேசுவை அனுமதிக்க நான் தயாராக இருக்கிறேனா?