நாள் 28: இயற்கையின் மீது தேவவல்லமை மத்தேயு 8:23-27
மத்தேயு பதிவுசெய்த மூன்று குணப்படுத்தும் அற்புதங்கள் வேறு மூன்று அற்புதங்களால் அதன் பெரிதான நோக்கத்தைக் காட்டுகின்றன. இயற்கையின் மீது வல்லமை மற்றும் பிசாசுகளின் மீது இயேசுவின் வல்லமை மற்றும் பாவத்தை மன்னிப்பதற்கான அவரது அதிகாரம் ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த அற்புதங்கள் பகுத்தறியும் மக்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் காட்சி அல்ல, ஆனால் அவருடைய தெய்வீக வல்லமையின் அர்த்தமுள்ள அறிகுறிகள்.
கடலில் புயல் (மத்.8:23-24)
கலிலேயாக்கடல் மலைகளால் சூழப்பட்டு, கடல் மட்டத்திற்குக் கீழே உள்ளது. நியூசிலாந்தின் சில கடல்களில் புயல்கள் ஏற்படும்போது அவை மிகவும் ஆபத்தானதான இருக்கும். ஏரிகள் அமைதியானவை மற்றும் பிரகாசமான சூரிய ஒளியில் அமைதியாகக் காணப்படும், ஆனால் அலைகள் அடுத்த கணம் திடீர் புயல் காற்றினால் ஒரு குழம்பாக மாறும். இந்த சம்பவம் தண்ணீர் குவளையில் ஏற்பட்ட புயல் அல்ல. இங்கே பயன்படுத்தப்படும் சொற்பதம் பூகம்பம் போன்ற நடுக்கம் போன்றது என்று குறிப்பிடப்படுகிறது. மத்தேயு காற்றின் பெலத்தினால் படகுகள் தண்ணீரின் வெள்ளத்தில் மூழ்கின என்பதாக விவரிக்கிறார். ” படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று” என்கிறார் மாற்கு, மற்றும் லூக்கா “அவர்கள் மோசமடையத்தக்கதாய் படவு ஐலத்தினால் நிறைந்தது” என்கின்றார். சீஷர்கள் மெய்யாவே இடுக்கத்திலும் நெருக்கடியிலும் இருந்தனர்.
இயேசு அமைதியாயிருத்தல் (மத்.8:24)
இயேசு பிரசங்க பீடமாக உபயோகித்த படகு அலைகளினால் தானியத்தின் கோது போன்று முன்னும் பின்னுமாகத் தூக்கி எறியப்பட்டது. ஆனால் தனது கடுமையான ஊழியத்தால் சோர்ந்துபோன இயேசு பீதியடைந்த சீஷர்களுக்கு மத்தியில் தூங்கினார். இயேசு ஒரு உண்மையான மனிதர் என்பதற்கு அவருடைய சோர்வு ஒரு சான்றாகும். அவர் மனிதர், ஆனால் ஒரு வார்த்தையில் புயலைத் தணித்த ஒரு தெய்வீக வடிவம். அவருடைய இருதயமும் மனமும் தேவனோடு இருந்தபடியால், அவர் ஆழ்ந்து நிம்மதியாகத் தூங்க முடிந்தது.
விசுவாசமற்ற சீஷர்கள் (மத்.8:25-28)
தங்கள் பயத்திலும் பீதியிலும், சீடர்கள் தங்கள் கர்த்தரைக் குறைகூறுவதற்கு இட்டுச் செல்லப்பட்டனர். “போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா? ” (மாற். 4:38). இந்த வார்த்தைகளால் அவர்கள் இயேசுவை எழுப்பினர். இந்த நிந்தையான பதிலா இயேசு தம்முடைய சீஷர்களை நேசிப்பதற்கும் கவனிப்பதற்கும் கிடைத்தது? அவர்களே ஒரு கண்டிப்புக்கு ஏற்றவர்கள். ஆனால் இயேசு அவர்களை வேறொரு கேள்வியைக் கேட்டு அன்பாகவும் பணிவாகவும் நோக்கினார்: “அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்;?” பயத்தின் விசித்திரமான பகுதியை நாம் பார்க்க வேண்டும் -” மடிந்துபோகிறோம் “- மற்றும் நடுக்கம் நிறைந்த விசுவாசம் – “இரட்சியும்” – என்பதையும் கவனிக்கவும்.
அதிகாரம் வாய்ந்த வார்த்தை (மத்.8:26)
இயேசுவின் வல்லமையான கட்டளைக்குப் பின்பு: “இரையாதே, அமைதலாயிரு!” புயல் தணிந்தது, அது மிகவும் அமைதியானது. ஆனால் இயேசுவின் வல்லமையின் இந்த அமானுஷ்ய தாக்கத்தைக் கண்டு சீஷர்கள் ஆச்சரியமும் பயமும் அடைந்தவர்களாகி கூறினார்கள்: “இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே?!” கிறிஸ்து எங்கள் வாழ்க்கைக் கப்பலில் இருந்தால், பயம் நியாயமற்றது மற்றும் தேவையற்றது. ஆம், நாங்கள் எங்கள் விசுவாசத்தைக் மறுதலித்து, பயம் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றோம். விசுவாசி தனது வேலை முடியும் வரை மரணிக்கமாட்டார். நம் வாழ்வில் புயல்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக வீசினாலும், அவற்றை இயேசு தடுக்க முடியும். கவலையின் அலைகளாகவோ அல்லது உணர்ச்சிகளின் கிளர்ச்சியாகவோ இருக்காலம். இயேசு மட்டுமே அவற்றிற்கு ஆண்டவராக இருக்கின்றார். இயேசுவின் சபையானது விரோதம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகினாலும், அதை வெல்ல முடியாது (மத்.16.18). “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”
சுய பரிசோதனைக்கு:
நம்முடைய பயங்கள் எங்கள் விசுவாசமின்மையைப் பிரதிபலிக்கிறது.